ஆரம்பிச்சி கொஞ்ச நாள் தான் ஆகுது.! அதுக்குள்ள “தென்றல் வந்து என்னை தொடும்” சீரியலில் இருந்து வெளியேறிய பவித்ரா.? வெளிவந்த உண்மை காரணம்.

சினிமா உலகில் பெரும்பாலும் மாடலிங் துறை மற்றும் சின்னத்திரையில் இருந்து வரும் பிரபலங்கள் தான் பெரும்பாலும் பட வாய்ப்புகளை கைப்பற்றி சிறப்பாக சென்று கொண்டிருக்கின்றன. அந்த வகையில் விஜய் டிவியில்  நடிக்கும் நடிகர் நடிகைகள் அடுத்ததாக வெள்ளித்திரையில் அதிகம் கவனம் செலுத்துகின்றன.

அந்தவகையில் கனா காணும் காலங்கள் சரவணன் மீனாட்சி போன்ற சீரியலின் மூலம் அறிமுகமாகி  பிரபலமானவர் நடிகர் கவின். இவர் தற்பொழுது வெள்ளித்திரையில் பல பட வாய்ப்புகளை கைப்பற்றி நடிகர் என்ற அந்தஸ்தையும் பெற்று சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் டாப் ஹீரோக்களின் படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார்.  மேலும் பகல்நிலவு கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்களில் நடித்து வந்த ஷிவானி நாராயணன் பின்பு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பிரபலமடைந்து தற்பொழுது வெள்ளித்திரையில் உலகநாயகன் கமலஹாசன் நடித்து வரும் விக்ரம் திரைப்படத்தில் இவரும் நடித்து வருகிறார்.

மேலும் சின்னத்திரையில் முக்கிய சீரியல்கள் ஆன பாரதி கண்ணம்மா சீரியலின் நாயகி ரோஷினி தற்பொழுது படவாய்ப்பு காரணமாக இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். அதனை அடுத்து நாம்இருவர்நமக்குஇருவர் சீரியலில் நடித்து வந்த ரக்ஷிதாவும் கன்னட திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதுபோல் தற்பொழுது பல சின்னத்திரை நடிகைகளும் சீரியலில் இருந்து விலகுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அந்த வகையில் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நடித்து வந்த பவித்ரா தற்போது இவரும் பட வாய்ப்பின் காரணமாக சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Leave a Comment