அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு ரஜினி பேசிய உருக்கமான செய்தி.? சிறுத்தை சிவா பார்த்து என்ன சொன்னார் தெரியுமா.?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திறமை உள்ள இயக்குனர்களை கண்டறிந்து அவர்களுடன் கூட்டணி அமைப்பது வழக்கம் அதிலும் கமர்ஷியல் படங்களின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இயக்குனரை வர வழித்து ரஜினியே கதை கேட்டு வாய்ப்பு கொடுப்பது உண்டு அந்த வகையில் அஜித்தின் விசுவாசம் கமர்சியல் படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து ரஜினி சிறுத்தை சிவாவை அழைத்தார். ஒரு சிறப்பான கதையை ரஜினிக்கு சொன்னார்.

அது படமாக எடுக்கப்பட்டது தற்போது ரஜினியின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து விட்டது தற்போது மீனா, நயன்தாரா போன்ற பிரபலங்கள் நடிக்கும் காட்சிகள் மட்டும் இன்னும் ஒரு பத்து நாட்கள் வைத்திருக்க வேண்டிய சூழல் நிலவி உள்ளதாம். முடிந்த கையோடு ரஜினி தற்போது சென்னை வந்துள்ளார் வெகுவிரைவிலேயே அமெரிக்கா செல்ல உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஜினி எப்போதும் படத்தை உடனடியாக முடித்துக் கொடுப்பதில் அதிகம் ஆர்வம் காட்டக் கூடியவராக தான் தற்போது வரையும் இருந்து உள்ளார். ஆனால் அண்ணாத்த படப்பிடிப்பிற்கு மட்டும்  நீண்ட நாட்களை இழுத்து கொடுத்தது. எது எப்படியே படத்தின் ஷூட்டிங் முடிந்தது.

சூட்டிங் முடிந்த கையோடு ரஜினி சென்னை வருவதற்கு முன்பாக அவரு சோர்வாக தான் இருந்தாராம்.ரஜினி அண்ணாத்த படத்தின் இறுதி நாளில் பட குழுவினரை நீண்ட நேரம் உரையாடி உள்ளார்.

எனக்கு உடம்பு சரியாக ஒத்துழைக்காததால் என்னால் இன்னும் நீண்டகாலம் சினிமாவுலகில் தொடர்ந்து பயணிக்க முடியாது என்பது எனக்கு நன்றாக தெரியும் அதனால் ஓரிரு படங்களில் நடித்துவிட்டு சினிமாவில் இருப்பேனா என்று தெரியவில்லை ஆனால் அனைவரும் தங்களுடைய குடும்பத்தை கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும் என மனமுருகி குறிப்பிட்டதாக அண்ணாத்த படப்பிடிப்பு தளத்திலிருந்து செய்திகள் கசிகின்றன.

மேலும் ரஜினியின் வாழ்க்கையில் அண்ணாத்த திரைப்படம் மிக முக்கியமான திரைப் படமாக இருக்குமென சிறுத்தை சிவாவிடம் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment