சூர்யா நடிப்பில் மிரட்டிய “24” படத்தின் இரண்டாம் பாகம் ரெடி – எப்பொழுது ரிலீஸ் தெரியுமா.?

தமிழ் சினிமா உலகில் வாரிசு நடிகர்களின் மகன் மகள்கள் சினிமா உலகில் கால் தடம் பதிகின்றனர். ஆனால் அவர்களெல்லாம் பட வாய்ப்பை ஆரம்பத்தில் கைப்பற்றி நடித்துவிட்டு ஒரு கட்டத்தில் காணாமல் போய்விடுகின்றனர். ஆனால் நடிகர் சூர்யா அப்பாவை போல மிக பொறுமையாக இருந்து தனது திறமையை வெளிக்காட்டி படிப்படியாக முன்னேறி தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.

இவர் ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்தாலும் போகப்போக ரசிகர்களுக்கும் மக்களுக்கும் புதுமையான படங்களை கொடுக்க வேண்டும் என்பதற்காக வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த படங்களும் அவருக்கு வெற்றியை பெற்றுத் தருகின்றன.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெய் பீம் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் பல்வேறு விருதுகளை குவித்தது மேலும் சூர்யாவுக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்று தந்த திரைப்படமாக ஜெய்பீம் பார்க்கப்பட்டது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவரது கையில் எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் போன்ற பல்வேறு படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

முதலாவதாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் 24 இதில் அவர் ஹீரோ, வில்லன், அப்பா என மூன்று விதமான கதாபாத்திரத்தில் சூர்யா மிரட்டியிருப்பார். இந்த படத்தை விக்ரம் குமார் எடுத்திருந்தார்.

முதல்பாகம் சிறப்பாக இருந்த காரணத்தினால் இதன் இரண்டாவது பாகம் எப்பொழுது எடுப்பீர்கள் என கேட்டு வந்த நிலையில் அதற்கு பதில் கிடைத்துள்ளது. இந்த வருடத்தின் ஜூன் ஜூலை மாதத்தில் படம் வெளியாகும். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என கூறி உள்ளார்.

Leave a Comment