உங்க பொண்ணுக்கு பட வாய்ப்பு வேணும்னா நீங்க மேனேஜரையும், தயாரிப்பாளரையும் அட்ஜஸ்ட்மென்ட் செய்யணும்..! எந்த தேதி எனக் கேட்ட நடிகையின் அம்மா…? இருண்டுபோன நடிகையின் திரை வாழ்க்கை

கடந்த சில வருடங்களாக நடிகைகளுடன் ஓப்பனாகவே அட்ஜஸ்ட்மென்ட்க்கு வரீங்களா என கேட்டு விடுகின்றனர் இதனால் ஒரு சில திறமையான நடிகைகள் முதலிலேயே சினிமாவும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் எனக் கூறி வெளியேறி இடுகின்றனர் அப்படித்தான் ஒரு திறமையான நடிகைக்கு நடந்துள்ளது அது குறித்து தான் நாம் பார்க்க இருக்கிறோம்..

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “ஜெயம்” படத்தில் நடிகை சதாவின் தங்கையாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரையில் ஆண்டாள் அழகர், பிரிவும் சந்திப்போம் போன்ற சின்ன சின்ன சீரியல்களில் நடித்தார்.

ஒரு கட்டத்தில் ரோகித் என்பவரை திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் இருக்கிறார். அதன் பின் மீடியா பக்கம் திரும்ப வில்லை.. இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில்  தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து அவர் பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது.. 7 வயதில் இருந்து 26 வரை  குழந்தை நட்சத்திரமாகவும், தொகுப்பாளராகவும் இருந்தேன்.

பின் திரை வாய்ப்பில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  அப்பொழுது என் அம்மாவிடம் அட்ஜஸ்மெண்ட் பண்றீங்களா என கேட்டனர்.. அது புரியாத என் அம்மா படப்பிடிப்பு தேதி தானே சார் பார்த்துக் கொள்ளலாம் என்றார் ஆனால் அந்த நபர் அது இல்ல மேடம் மேனேஜர் கூட.. தயாரிப்பாளர் கூட.. அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண வேண்டும் என சொன்னார்.

இதை கேட்டு ஷாக்கான என் குடும்பத்தினர் இனி படமே நடிக்க வேண்டாம் எனக் கூறி முடிவு எடுத்து என்னை திருமணம் செய்து வைத்து விட்டார்கள் என கூறினார். இதைக் கேட்ட ரசிகர்கள் திறமையை விட அட்ஜஸ்ட்மெண்ட் தான் பெருசாக சினிமாவில் எதிர்பார்க்கிறது என கூறி கமெண்ட் அடித்து தனது ஆதங்கத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.

Leave a Comment