தியேட்டரில் காத்து வாங்கிய துணிவு மற்றும் வாரிசு திரைப்படத்தின் காட்சி..! அட எந்த ஊரில் தெரியுமா..?

கடந்த 11ஆம் தேதி தல அஜித் நடிப்பில் உருவான துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களுமே திரையரங்கில் மிகப் பிரமாண்டமாக வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் அவற்றை மிகவும் பிரமாண்டமாக திரையரங்கில் திருவிழா போன்று கொண்டாடி வந்தார்கள்.

அந்த வகையில் தல அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் முதல் நாளில் மாபெரும் ஆச்சரியத்தை கொடுத்திருந்த்து அதே போல வாரிசு திரைப்படம் பல நெகடிவ் விமர்சனங்களை பெற்றிருந்தாலும் தற்பொழுது அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வசூலில் முன்னிலை வகித்து வருகிறது.

எப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது இந்த இரண்டு திரைப்படங்களின் காட்சிகளையும் சில தியேட்டர்கள் நிராகரித்து வருகிறார்கள் இவ்வாறு வெளிவந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டும் இல்லாமல் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இந்த திரைப்படங்கள் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது அதுமட்டுமில்லாமல் சில ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் அலாடி வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

இப்படி இருக்கும் நிலையில் ஒரு சில கிராமங்களில் மட்டும் இந்த திரைப்படத்தை அதிகாலை காட்சிக்கு கூட்டமே வரவில்லையாம்  கரூர் மாவட்டத்தை பிறந்த அவரக்குறிச்சியில் துணைவு திரைப்படத்தின் ஒரு மணி மற்றும் நான்கு மணி காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லாக இருந்தது ஆனால் அதன் பிறகு ஏழு மணி காட்சியில் சுமார் பத்து பேர் மட்டுமே வந்திருந்தார்கள்.

இதனால் அந்த தியேட்டரில் துணிவு திரைப்படத்தின் காட்சி ரத்து செய்யப்பட்டது மட்டும் இல்லாமல் அதன் பிறகு  அடுத்த காட்சியில் கூட்டம் நிறைந்தது அதன் பிறகு தான் தெரிந்தது ரசிகர்களுக்கு 3 மணி சிறப்பு காட்சி ஒளிபரப்புவது  தகவல்கள் தெரியாத காரணத்தினால் தான் யாரும் வரவில்லை என்பது.

ஆனால் தற்பொழுது அனைத்து காட்சிகளும் தியேட்டரில் ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருந்து வருகிறார்கள். அதேபோல தான் ஈரோடு பக்கத்தில் நள்ளிரவில் வாரிசு திரைப்படத்திற்கு எந்த ஒரு ரசிகர்களும் வராமல் காத்து வாங்கிக் கொண்டிருந்தது பின்னர் தகவல்கள் தெரிந்த நிலையில்  தற்பொழுது தியேட்டரில் டிக்கெட் விற்க முடியாத அளவிற்கு கூட்டம் இருந்து வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment