IPL -ல் மீதி போட்டி இங்க தான் நடக்க போகுது.! எந்த இடம், எந்த தேதியில் தெரியுமா.? உண்மை தகவல் இதோ.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டி மிக சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம் அந்த வகையில் பல தடைகளைத் தாண்டி 14வது ஐபிஎல் சீசன் நடைபெற்றது. 21 போட்டிகளில் சிறப்பாக நடைபெற்ற நிலையில் மீதி போட்டிகள் நடத்த இருந்த போது ஒரு சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தேதியன்று தடைசெய்தது BCCI.

மீதி போட்டியை எப்பொழுது நடத்தலாம் என BCCI ஆரம்பத்திலிருந்து கணக்கு போட்டு வந்த நிலையில் பலரும் இதற்கு ஐடியாக்கள் கொடுத்தாலும் அதனை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு தற்போது ஒரு புதிய ரூட்டை போட்டுள்ளது.

அதாவது இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடனான உலக டெஸ்ட் போட்டியில் மோத உள்ளன அதன் பிறகு இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது இந்த தொடர் முடிந்த பிறகு இந்திய அணிக்கு எந்த அணியுடனும் மேட்ச் விளையாடவில்லை.

இப்படி இருக்கின்ற நிலையில் மீதி இருக்கின்ற ஐபிஎல் போட்டிகளை நடத்த இந்திய நிர்வாகம் திட்டம் போட்டுள்ளது. இங்கிலாந்தில் ஐபிஎல் போட்டி நடத்தப்படும். செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 15 வரை ஒரு மாத காலத்தை சரியாக பயன்படுத்தி ஐபிஎல் போட்டியை முடிக்க நேரிடும் என கூறப்படுகிறது.

இதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகமும் ஒத்துழைத்தால் மட்டுமே இது நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment