ஷாலினியிடம் கேள்வியைக் கேட்டு திணறடித்த நிருபர் – உடனே பொங்கி எழுந்த அஜித்.! பின் என்ன நடந்தது தெரியுமா..

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருபவர் அஜித். காரணம் ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதுதான் ரசிகர்களுக்கு ஏற்ப அண்மை காலமாக சமூக அக்கறை மற்றும் ஆக்ஷன் திரைப்படங்கள் கொடுத்து அசத்துகிறார் அந்த வகையில் கடைசியாக வலிமை திரைப்படம்.

வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததைத் தொடர்ந்து அடுத்தடுத்த படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் பற்றிய செய்திகள் அவ்வபோது வெளி வருவது வழக்கம் அந்த வகையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் அஜித்-ஷாலினி குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் சொன்னது அஜித் சினிமாவையும் தாண்டி நிஜ வாழ்க்கையிலும் ஒரு நல்ல மனிதராக இருக்கிறார் உண்மையில் சொல்லவேண்டுமென்றால் ஷாலினிக்கு ஒன்று என்றால் ஓடி வந்து விடுவார். அஜித்-ஷாலினி எப்போது காதலிக்க ஆரம்பித்தாரோ அப்போதிலிருந்து இப்பொழுது வரையிலும் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்பது மாதிரி இருக்கிறதே தவிர வேறு எதுவும் இல்லை.

ஷாலினிக்கு ஒன்னுனா அஜித் வருவார் என பிரபல பத்திரிக்கையாளர் அந்தகன் கூறியுள்ளார் இது குறித்து மேலும் பேசிய அவர் அஜித் ஷாலினி இருவரும் திருமணம் செய்து கொண்ட பிறகு ஒரு பிரஸ்மீட்டில் கலந்து கொண்டனர் அப்பொழுது பத்திரிக்கையாளர் ஒருவர் அதை விட்டுவிட்டு ஷாலினியிடம் தொடர்ந்து கேள்விகளை கேட்க ஒரு கட்டத்தில் ஷாலினி திணறி உள்ளார்.

இதை பார்த்த அஜித் அந்த நிருபரை இன்னும் உங்களுக்கு என்னதான் வேண்டுமென அதட்டி உள்ளார். பின் அந்த நிருபர் அஜித்திடம் கேள்விகளை கேட்க அதிரடியாக பதிலை சொல்லி அசத்தினார். இதிலிருந்தே தெரிகிறது ஷாலினிக்கு ஒன்று என்றால் அஜித் எங்கு இருந்தாலும்  வந்துவிடுவார்.

Leave a Comment