சிவ பூஜையில் கரடி புகுந்தது போல் அண்ணாத்த திரைப்படத்தின் வசூலை கெடுத்த மழை.! ஐந்தாவது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

தீபாவளியை முன்னிட்டு கோலாகலமாக வெளியான திரைப்படம் தான் அண்ணாத்த இந்த திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஒரு நல்ல வரவேற்பை கொடுத்து விட்டது என்றுதான் கூறவேண்டும் பல மாதங்களாக இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடைபெற்று வந்த இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்துவிட்டது.

குறிப்பாக இந்த திரைப்படத்தில் நடித்த குஷ்பூ,மீனா,கீர்த்தி சுரேஷ்,நயன்தாரா போன்ற பல பிரபலங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி வருகிறார்கள் மேலும் இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டுமே உலகம் முழுவதும் சுமார் 70 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இரண்டாவது நாள் 100 கோடி வரை பணம் வசூலிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கொண்டாடி வந்தார்கள்.ஆனால் நேற்று மழை தாக்கத்தின் காரணமாக வசூலில் மிகவும் குறைந்து விட்டது தமிழ்நாடு முழுவதும் நேற்று இரண்டு கோடி வரைதான் வசூல் செய்துள்ளதாம்.

அண்ணாத்த திரைப்படம். இப்படி இருக்கும் நிலைமையில் பல ரசிகர்கள் இந்த தகவலை அறிந்து விட்டு சிவ பூஜையில் கரடி புகுந்தது போல் அண்ணாத்த திரைப்படத்தின் வசூலை மழை வந்து கெடுத்து விட்டது என்று கூறி வருத்தப்பட்டு வருகிறார்கள்.

rajini
rajini

மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் கூடிய சீக்கிரம் நாங்கள் மீண்டும் அண்ணாத்த திரைப்படத்தை பார்ப்போம் ஏனென்றால் இந்த திரைப்படம் மிகவும் பிரமாதமாக இருக்கிறது மேலும் ரஜினிகாந்த் அடுத்ததாக எந்த திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்பது மட்டும் தெரிந்தால் போதும் என கேட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment