படத்தின் பட்ஜெட்டை குறைத்தும் கண்டுகொள்ளாத பிரபல தயாரிப்பு நிறுவனம்.? வருத்தப்பட்டும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்.

தமிழ் சினிமாவில் பிரமாண்ட பட்ஜெட்டில் சிறப்பான படங்களை எடுத்து வெற்றி மேல் வெற்றியை கண்டவர் இயக்குனர் ஷங்கர். தமிழ் சினிமாவில் இதுவரை ரஜினி அர்ஜுன், கமல், விஜய், விக்ரம், பிரசாந்த் போன்ற டாப் நடிகர்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கடைசியாக நடிகர் கமலை வைத்து இந்தியன் இரண்டாவது பாகத்தை எடுக்க அதிகம் முயற்சித்தார். ஆனால் படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கப் பட்டதிலிருந்து இந்த படத்தின் ஷூட்டிங்கில் ஏதாவது ஒரு பிரச்சனை நடந்து கொண்டுதான் இருந்தது அந்த வகையில் ஒரு தடவை ஷூட்டிங்கில் எதிர்பாராதவிதமாக கிரேன் கீழே விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

இதனால் லைக்கா நிறுவனம் படத்தை சிறு இடைவெளி விட்டு படத்தை எடுத்துக்கொள்ளலாம் என முனைப்பு காட்டியது.ஆனால் ஷங்கர் மற்றும் கமல் அடுத்த அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தனர். கமல் அரசியலில் பிரவேசம் போக..ஒரு கட்டத்தில் இனி படத்தின் சூட்டிங் ரொம்ப தாமதம் என்று நினைத்து சங்கர் தெலுங்கு பார்க்கவும் போயி ராம்சரண் வைத்தது ஒரு புதிய படத்தை இயக்கினார்.

ஆனால் தயாரிப்பாளர் லைக்கா நிறுவனம்  இந்தியன் 2 படத்தை எடுக்க வேண்டும் என பல்வேறு வழக்குகளை போட்டு நீதிமன்றத்தை நாடியது ஒருவழியாக ஷங்கரும் இந்தியன் இரண்டாவது பாகத்தை எடுக்க ஒப்புக்கொண்டார். தற்பொழுது நிலவும் சூழல் சரியில்லாத தால் லைக்கா நிறுவனம் படத்தின் பட்ஜெட்டை இருபதிலிருந்து முப்பது பர்சன்டேஜ் குறைக்கும் என தெரியவருகிறது.

அதற்கும் ஷங்கரும் ஒன்றும் சொல்லாமல் ஓகே சொன்னாலும் லைகா நிறுவனம் அவரை கண்டு கொள்ளாமலேயே இருப்பது அவரை சற்று வருத்தமடைய செய்துள்ளது. கமலும் இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்க அதிகம் ஆர்வம் காட்டி வருவதாக தெரியவருகிறது.

Leave a Comment