ரஜினியை நம்பி 3000 கோடி செலவு செய்ய காத்திருக்கும் தயாரிப்பு நிறுவனம்.! சின்ன பொரியை போட்டு பெரிய மீனை பிடித்த தலைவர்…

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினி இவர் தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பல வெற்றி படங்களை கொடுத்து தற்போது தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் இவர் எந்த அளவிற்கு வெற்றி படங்களை கொடுத்து உள்ளாரோ அதே அளவிற்கு பல தோல்வி படங்களையும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான் தோல்வி படங்களை கொடுத்தாலும் அந்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை இதுவரைக்கும் யாரும் முந்த முடியாத அளவிற்கு இருக்கிறார். இதனை தொடர்ந்து ரஜினி அவர்கள் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உறுவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த திரைப்படம் இந்த ஆண்டு  வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த திரைப்படத்தை 3000 கோடி செலவில் நடிகர் ரஜினியை வைத்து பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க ரெடியாக காத்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது கன்னட திரைப்படமான கே ஜி எப் படத்தின் மூலம் மாபெரும் லாபத்தை பெற்ற நிறுவனமான  hombale fims நிறுவனம் தற்போது ரஜினிக்காக 3000 கோடி செலவு செய்ய தயாராக இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த நிறுவனம் தயாரித்த காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது அதனை தொடர்ந்து அடுத்ததாக ரஜினியை வைத்து தயாரிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் hombale films உடன் ரஜினி அவர்கள் இணைந்துள்ளார் என்ற நற்செய்தி ரசிகர்கள் மத்தியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினி அவர்கள் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் ட்ரெய்லர் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment