நாங்க எல்லாம் மேல வரவே கூடாதா..? இல்லை படம் பண்ணவே கூடாதா..? சரண்யா பொன்வண்ணனை அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர்..!

இந்தியாவில் உள்ள பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை தான் சரண்யா பொன்வண்ணன் இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் புது பட தயாரிப்பாளர் படத்தில் நடித்துள்ளார் இதனிடையே ஆடியோ லான்ச்க்கு அவர் செல்லாததன் காரணமாக அந்த படத்தின் தயாரிப்பாளர் அவரை வெளுத்து வாங்கியுள்ளார்.

பொதுவாக நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்கள் திரைப்படங்களில் காமெடி அம்மாவாகவும்  செண்டிமெண்ட் அம்மாவாகவும் நடித்தது மட்டும் இல்லாமல் கம்பீர அம்மாவாகவும் நடித்து கலக்கி உள்ளார் அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் இவர் பிரபலமாவதற்கு வழி வகுத்தது.

மேலும் தொடர்ந்து பல்வேறு திரைப்படத்தில் நடித்த நமது நடிகை விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சென்டிமென்ட் அம்மாவாக பார்க்கப்பட்டார் மேலும் இதன் மூலமாக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும் நமது நடிகைக்கு கிடைத்தன.

அந்த வகையில் தற்பொழுது இருக்கும் முன்னணி நடிகர்கள் பலருடைய திரைப்படத்திலும் இவர் தான் அம்மாவாக நடித்த வருகிறார் ஏனெனில் இவருடைய நடிப்பு அந்த அளவிற்கு பிரமாண்டமாக அமைந்தது மட்டும் இல்லாமல் களவாணி திரைப்படத்தில் இவர் நடித்ததில் ஏகப்பட்ட ரசிகர்களை குவித்து விட்டார்.

இந்நிலையில் புது பட தயாரிப்பாளர் ஒருவர் ஒரு திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் இந்த திரைப்படத்தின் அம்மா கதாபாத்திரத்தில் சரண்யா பொன்வண்ணன் கமிட் ஆகிய நிலையில் இந்த ஆடியோ லான்ச் நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளர் சரண்யா பொன்வண்ணன் செய்த தவறை சுட்டிக்காட்டி மேடையில் பேசியிருந்தார்.

ஏனெனில் சரண்யா பொன்வண்ணனை வைத்து தான் இந்த திரைப்படத்தின் கதை நகரும் அந்த வகையில் அவர் இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் கலந்து கொள்ளாதது மிகவும் வருத்ததக்க செயலாக அமைந்துள்ளது. மேலும் அவரை நாங்கள் காலில் விழுந்து கும்பிடாத அளவிற்கு கூப்பிட்டு பார்த்தோம் ஆனால் அவர் கிறிஸ்மஸ் நிகழ்ச்சி கொண்டாடுவதன் காரணமாக இதில் கலந்து கொள்ளாமல் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

அதுமட்டுமில்லாமல் இதுவே சூர்யா தனுஷ் போன்ற நடிகர்களின் திரைப்படங்களில் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு செல்லாமல் இப்படி ஒரு பதிலை அவர் கூறியிருப்பாரா என சரண்யா கேள்வி கேட்பது மட்டும் இல்லாமல் என்னை போன்ற புதுமுக தயாரிப்பாளர்களுக்கு இவ்வளவு தான் திரை உலகில் மரியாதையா..? என கேட்டது மட்டும் இல்லாமல் நாங்கள் மேலே வரக்கூடாது என சரமறையாக பேசி உள்ளார்.

மேலும் என்னை போன்ற சிறுபட தயாரிப்பாளரை ஏன் இவ்வளவு கேவலமாக பார்க்கிறீர்கள் இப்படி போட்டு நசுக்காதீர்கள் எங்களை என்று கண்ணீர் மல்க நமது தயாரிப்பாளர் பேசியது மிகவும் வருந்தத்தக்க செய்தியாக அமைந்து விட்டது மேலும் இந்த பதிவு சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment