தனுஷை வைத்து பக்காவாக பிளான் போட்ட தயாரிப்பாளர்..! சரியான நேரம் பார்த்து எஸ் ஆன தனுஷ்..!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக கொடிக்கட்டு பறந்து வரும் நடிகர் என்றால் அது தனுஷ் தான் அந்த வகையில் இவர் ஆரம்பத்தில் சினிமாவில் வளர்வதற்கு அயராது போராடி உள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் நமது நடிகர் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல வெற்றியை பெற்றதை தொடர்ந்து தற்பொழுது தன்னுடைய அண்ணன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் தனுஷ் அவர்கள் கேப்டன் மில்லர் மற்றும் வாத்தி ஆகிய திரைப்படங்களில் நடித்த வருகிறார் இந்த திரைப்படங்களும் வேலை செய்து தயாராகி வருவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் நடிகர் தனுஷ் அவர்கள் பைனான்சியர் அன்பு செல்வன் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருந்தது பாதியிலேயே நின்று விட்டதாம்.

அந்த வகையில் அன்பு செழியனிடம் சில குறிப்பிட்ட தொகையை தனுஷ் அவர்கள் கடனாக பெற்றுள்ளார் அந்த வகையில் அந்த கடனை அடைக்கும் வகையில் தான் ஒரு திரைப்படம் உங்களுடைய தயாரிப்பில் நடித்த தருவதாக கூறியிருந்த நிலையில் தனுசுக்கு இதில் கொஞ்சம் கூட உடன்பாடு இல்லாமல் சம்மதித்துள்ளாரம்.

ஆனால் நமது தயாரிப்பாளரோ பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு விட்டு அவர்களை தனுஷ் இடம் அனுப்பி வைத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார் ஆனால் தனுஷ் தனக்கு கதை பிடிக்கவில்லை என கூறி திருப்பி அனுப்புவது வழக்கமாக வைத்துள்ளார்.

இப்படி இருக்கும் நிலையில் திடீரென நமது தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரி சோதனை நடத்திய நிலையில் நமது தயாரிப்பாளர் தற்போது திரைப்படம் தற்போது தேவையில்லை சிறிது நாள் கழித்து அந்த படத்தை பார்த்துக் கொள்ளலாம் என தயாரிப்பாளர் கூறியதால் தனுஷ் மிக சந்தோஷமாக உள்ளதாக கூறியுள்ளார்கள்.

Leave a Comment