லியோ படப்பில் ஏற்பட்ட பிரச்சனை.! திடீரென சென்னை திரும்பிய திரிஷா.. நடந்தது என்ன.?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் தான் சமூக வலைத்தளங்களில் ஆட்சி செய்து வருகிறது அந்த அளவிற்கு ஒரு பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

அது மட்டுமல்லாமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் அந்த வகையில் தற்போது உருவாகி வரும் தளபதி 67 திரைப்படமும் அப்படித்தான். நடிகர் விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படத்தை விட தளபதி 67 திரைப்படத்திற்காக தான் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் அப்டேட்டுகள் வெளியான போதும் ரசிகர்களை கையில் கூட பிடிக்க முடியவில்லை அந்த அளவிற்கு ஒரு கூஸ்பம்ஸ் உடன் வெளியானது தளபதி 67 டைட்டில் ப்ரோமோ வீடியோ. அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்திற்கு லியோ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற அப்டேட் வெளியாகியிருக்கிறது அந்த வகையில் விஜய் உடன் இணைந்து திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாள்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

முதற்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் தொடங்கப்பட்ட நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பை கொடைக்கானலில் நடத்த படகுழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் நடிகை திரிஷா அவர்கள் படபிடிப்பில் ஏற்பட்ட சில பிரச்சனையின் காரணமாக லியோ படத்தில் இருந்து விலகி சென்னை திரும்பி விட்டதாக ஒரு தகவல் இணையதளத்தில் பரவி வருகிறது.

ஆனால் அது உண்மையாலுமே வெறும் வதந்தி மட்டும் தான் உண்மை என்னவென்றால் நடிகை திரிஷா அவர்கள் லியோ பட குழுவினருடன் காஷ்மீரில் தான் இருக்கிறாராம் அது மட்டுமல்லாமல் அந்தப் புகைப்படம் பழைய புகைப்படம் என்று கூறப்படுகிறது. 14 ஆண்டுகள் கழித்து விஜய் மற்றும் திரிஷா கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் நடிகை திரிஷா அவர்கள் மட்டும் லியோ படத்திலிருந்து விலகுகிறார் என்ற தகவல் வெளியான உடனே ரசிகர்கள் கொஞ்சம் பதட்டம் அடைந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் இது உண்மையான தகவல் இல்லை என்று தெரிந்த உடனே நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். அது மட்டுமல்லாமல் விஜய் ரசிகர்கள் இதுபோல் வதந்தியை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment