புதிய படத்தால் வந்த சிக்கல் 50 லட்சம் தண்ட செலவு செய்த நடிகர் சூர்யா.! காட்டு தீ போல பரவும் செய்தி.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சூர்யா சூரரைப்போற்று வெற்றியை தொடர்ந்து அதை தக்க வைத்துக் கொள்ள சிறந்த இயக்குனர்கள் இடமும் கதையை கேட்டு தற்போது கமிட்டாகியுள்ளார்.  அந்த வகையில் முதலாவதாக பாண்டியராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

அதை முடித்த கையோடு இவர் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அதன் பிறகும் சிறந்த இயக்குனரான அடுத்தடுத்த கைகோர்ப்பு இருப்பதால் வெற்றியை தக்கவைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு நல்ல விருந்து கொடுக்கவும் காத்திருக்கிறார்.

நடிகர் சூர்யா சினிமாவில் நடிகர் என்ற அந்தஸ்தையும் தாண்டி பல படங்களை தயாரித்தும் வருகிறார். இந்த வகையில் இவர் தயாரித்த பல்வேறு படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து உள்ளது. மேலும்  படம் வெளிவருவதற்கு முன்பாக பல விருதுகளை வென்றுள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் இவர் தயாரித்த ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரையரங்கில் வெளியாகாமல் மாறுதலாக OTT தளத்தில் வெளியாகியது.

மத்தியில் இருப்பினும் நல்லதொரு வரவேற்பை பெற்றதால் ஓடிக்கொண்டிருந்தது இந்த படத்தில் ரம்யா பாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி உள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படம் ஒரு பாலிவுட் படத்தின் காப்பி என சூர்யாவுக்கு தெரியவர உடனடியாக இந்த படத்தை இயக்குனரை அழைத்து இந்த படத்தின் காப்பி உண்மைதானா என கேட்டாராம்.

ஆம் என்று இயக்குனர் கூற சூர்யா உடனடியாக அந்த படத்தை பாலிவுட்டில் இயக்கிய இயக்குனர்களை அழைத்து 50 லட்சம் பணத்தை கொடுத்து பிரச்சனையை முடித்து உள்ளார் ஆனால் இந்த திரைப்படத்தின் ரீமேக் ரைட்ஸ் வாங்கியிருந்தால் கூட இவ்வளவு பெரிய தொகையை போய் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment