இசைஞானி இளையராஜாவை வாழ்த்தி ட்விட் செய்த பிரதமர்..! எதற்காக தெரியுமா..?

தமிழ் சினிமாவில் தன்னுடைய இசையால் ரசிகர்களை கவர்ந்தவர் தான் இசைஞானி இளையராஜா இவ்வாறு பிரபலமான நமது இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் தமிழ் சினிமாவில் பல்லாயிரம் பாடல்களுக்கு மேலாக இசை அமைத்த இசைஞானி என்ற பட்டத்தை பெற்றார்.

இவ்வாறு பிரபலமான நமது இளையராஜா அவர்கள் சமீப காலத்திற்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடியை அம்பேத்கர் உடன் ஒப்பிட்டு ஒரு புத்தகத்தில் முன்னுரை எழுதியுள்ளார். இவ்வாறு அவர் எழுதிய முன்னுரை ஆனது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது ஆனால் அந்தக் கருத்தை மட்டும் நான் திரும்பி பெற மாட்டேன் என இளையராஜா உறுதி அளித்து விட்டார்.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எம்பி பதவி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மாநிலங்களில் உறுப்பினராக அவர் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின்படி அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு வெளிவந்த தகவலின் மூலமாக இசைஞானி இளையராஜாவுக்கு பல்வேறு பிரபலங்களும் ரசிகர்களும் மக்கள்களும் ஏன்  கட்சி தொண்டர் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இளையராஜாவுக்கு இப்படிப்பட்ட பொறுப்பு கிடைத்ததை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் இவ்வாறு அவர் வெளியிட்ட பதிவு ஆனது தற்பொழுது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

சமீபத்தில் பல்வேறு நடிகர்களும் அரசியல் பணியில் மிக ஆர்வமாக இருந்து வருகிறார்கள் அந்த வகையில் சமீபத்தில் இசைஞானி இளையராஜாவும் மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இறங்கியது பலரையும் ஆச்சரியத்தில் வீழ்த்தியுள்ளது.

Leave a Comment

Exit mobile version