கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக குடித்து காட்டி நிரூபித்த மடகஸ்கர் பிரதமர்! வைரலாகும் தகவல்.

The Prime Minister of Madagascar has drunkenly proved that he has found the Corona vaccine: உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் சீன நாட்டில் தொடங்கி இத்தாலி அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வட கொரியா, இந்தியா, போன்ற பல நாடுகளை  தாக்கியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவிக்கின்றனர். மேலும் பொருளாதாரத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டுளளனர். தனது அத்தியாவசிய தேவைக்கு கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

மேலும் உலகம் முழுவதும் இந்த வைரஸினால் 37 லட்சத்து 23 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த வைரஸினால் 2 லட்சத்து 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகி வருகிறது. மேலும் இந்த  வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் தும்மினாலோ இருமினாலோ மற்றும் அவர்கள் தொடும் பொருட்களை தொடுவதன் மூலம் வேகமாக பரவும்.  குறிப்பாக கைகளை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.  கண்,  மூக்கு,  வாய் போன்ற இடங்களில் கை  வைப்பதன் மூலம் மிகவும் வேகமாக பரவும்.

இந்த நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளில் பல்வேறு மருத்துவர்கள் ஆராய்ச்சிசயில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மடகாஸ்கர் நாட்டில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளது அனைவருக்கும் வியப்பாக உள்ளது.

மடகாஸ்கர் மாநிலத்தின் பிரதமர் ஆண்ட்ரே  ரெஜோலினா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது என்னவென்றால். அங்கு உள்ள தீவுகளில் ஆர்டிமீசியா என்ற தாவரத்தில் இருந்து மருந்து எடுக்கப் பட்டதாக கூறியிருக்கிறார். மேலும் இந்த மருந்தானது ஏற்கனவே மலேரியா நோயை குணப்படுத்த உதவியதாக கூறுகிறார்.  எனவே இந்த மருந்துக்கு கோவிட் ஆர்கானிக்ஸ் என்று பெயரிட்டுள்ளார். மேலும் இந்த மருந்தை அவர் செய்தியாளர்கள் முன்பு குடித்தும் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் இந்த மருந்தினை பற்றி எந்த ஒரு தகவலையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Leave a Comment