பட ப்ரமோஷனுக்கு சென்ற இடத்தில் நடிகையை தொடக்கூடாத இடத்தில் தொட்ட ரசிகர்.! பளார் என அறைந்த நடிகை.! வைரலாகும் வீடியோ

மலையாளத் திரைப்படமான சாட்டர்டே நைட் என்ற படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக பட குழுவினர் புரமோஷன் நிகழ்ச்சிக்காக கோழிக்கோட்டில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்றிருந்தனர். அப்போது அந்த படத்தில் நடித்த மலையாள நடிகை சானியா ஐயப்பன் மற்றும் கிரேஸ் ஆண்டனி ஆகியோருக்கு தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளார்கள்.

இந்த சம்பவம் சினிமா படத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர்கள் அளித்த புகாரின் பேரில் கோழிக்கோடு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

கண்ணூரிலும் மற்றொருவர் கொச்சியிலும் உள்ளார் அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய பெண் எஸ்ஐ தலைமையிலான காவல் அதிகாரிகள் சென்று உள்ளனர். தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை நடிகை சாணியா தனது சமூக வலைதளத்தில் நானும் என்னுடைய பட குழுவினரும் சாட்டர்டே நைட் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியாக கோழிக்ககோட்டில் உள்ள ஒரு  மாலில் விளம்பரப் படுத்திக் கொண்டிருந்தோம்.

அப்போது மாலில் எங்களையே அறியாமல் கூட்டம் அதிகமாகி விட்டது அதுமட்டுமல்லாமல் அவர்களைப் பாதுகாவலர்களால் கூட தடுக்க முடியவில்லை  நானும் என் சக நடிகர்களில் ஒருவரும் அங்கிருந்து வெளியேறினோம்.

நிலையில்  என்னுடன் இந்த படத்தில் நடித்த நடிகையிடம் சிலர் தவறாக நடந்து கொண்டனர் அது மட்டுமல்லாமல் அந்த கூட்டத்தில் எங்களால் யாரையும் கவனிக்க கூட முடியவில்லை. மேலும் நீங்கள் வீடியோவில் பார்த்தது போல் நான் அதிர்ச்சியுடன் அதற்கு பதில் அளித்தேன் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தற்போது மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமல்ல இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று காவல் துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment