சிவாங்கியை அழவைத்து பார்க்கும் நபர் – விடாமல் கேட்டும் அவரது அம்மா.! கடைசியில் என்ன ஆச்சி தெரியுமா.?

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது குரல் வளத்தினால் சிறப்பாக பாடல் பாடி பல்வேறு ரசிகர்களை கவர்ந்தவர் சிவாங்கி. இவர் நன்றாக பாடல் பாடியிருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் பாதியிலே எலிமினேட் ஆகி வெளியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவரது குரலில் பாடல் கேட்க நன்றாக இருந்தாலும் சிவாங்கி கீச்கீச் என பேசுவதை ரசிகர்கள் பலரும் கிண்டல் அடித்துள்ளனர். பின்பு இவர் குக் வித் கோமாளி  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதே குரலில் காமெடி செய்தது ஒரு கட்டத்தில் கிண்டலடித்த ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிக்கவும் வைத்தது.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம்  பெரிதும் பிரபலமடைந்த சிவாங்கி தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் டான் திரைப் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சினிமாவிலும் இவர் பாடல்களையும் பாடி அசத்தி வருகிறார். மேலும் குக் வித் கோமாளி முதல் மற்றும் இரண்டாவது சீசன்களில் கலந்து கொண்டு தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசனிலும் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி சின்னத்திரை வெள்ளித்திரை என சிறப்பாக பயணித்து வரும் சிவாங்கியின் வாழ்க்கையில் ஏதோ ஒரு சோகம் இருப்பது போல் தெரிய வருகிறது. சமீபகாலமாக அவரது ஸ்டேட்டஸ்கள் அந்த சோகத்தினை தெரிவிக்கின்றன. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு சிவாங்கி அவரது இன்ஸ்டா பக்கத்தில் “நீங்கள் தனிமையில் இருக்கிறீர்கள் என்பதற்காக டாஸ்கிங் மனிதர்களிடம் மீண்டும் போய் பழகாதீர்கள். தாகமாக இருக்கிறது என்பதற்காக விஷத்தினை குடிக்க முடியாது அல்லவா” என்ற வரிகளை பகிர்ந்துள்ளார்.

இப்படி சமீபகாலமாக சோக ஸ்டேட்டஸ் வைத்து வரும் சிவானியின் வாழ்வில் என்ன தான் நடக்கிறது என பலரும் யோசிக்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சிவாங்கியின் அம்மா சிவாங்கி எந்த கஷ்டத்தையும் என்னிடம் சொல்ல மாட்டாள் ஆனால் சமீபத்தில் யாரோ புண்படுத்தியது போல பாத்ரூமில் உட்கார்ந்து அழுதாள் என்னவென்று எனக்கு சரியாக தெரியவில்லை அவள் என்னிடம் எதுவாக இருந்தாலும் ஓப்பனாக பேச வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். என சிவாங்கியின் அம்மா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

shivangi-
shivangi-

Leave a Comment