பிக்பாஸ் சீசன் 5 – ல் போட்டியாளராக கலந்துக்கொண்டதுக்கு சம்பளம் வேண்டாம் என கூறிய பிரபலம்.? வெறும் கையோடு அனுப்ப மறுத்த விஜய் டிவி.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பிரபலமான சில போட்டியாளர்களை இந்த நிகழ்ச்சியில் இறக்கி இதன்மூலம் டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றி வருகிறது. இந்த நிகழ்ச்சியை சீசன் சீசனாக நடத்தி வருகின்றன. தற்போது பிக் பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாகி நிறைவடைய உள்ளது.

இந்த சீசன் 106 நாட்களை கடந்து இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் மக்கள் பலரும் வருத்தத்தில் உள்ளனர். கொரோனா காலகட்டத்தில் மக்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக விளங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது முடிவடைய உள்ளது. மேலும் இந்த சீசனில் தற்போது 5 பைனல் லிஸ்ட்  உள்ளனர்.

இதில் மக்களின் வாக்குகளின் படி முதலிடத்தில் ராஜு இரண்டாவது இடத்தில் பிரியங்கா அடுத்து பாவணி, அமிர், நிரூப் போன்ற பிரபலங்கள் உள்ளனர். இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் வருண். இவர் பழம்பெரும் நடிகர் ஐசரி வேலனின் பேரன் மற்றும் வருணின் மாமா தயாரிப்பாளர் ஐசரி கணேசன் ஆவார்.

தற்போது வரும் ஐசரி கணேசனின் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் “ஜோஷ்வா இமைபோல் காக்க” என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் இதற்கு முன் வருண் எல் கே ஜி, கோமாளி,  வனமகன், தலைவா போன்ற ஒரு சில படங்களில்  சின்ன ரோல்களில் நடித்து வந்தார். இந்த நிலையில்  பிக்பாஸ் போட்டியாளர்கள் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வருண் எனக்கு சம்பளமே வேண்டாம் என கூறியுள்ளாராம்  இந்த நிலையில் வருணை வெறுங்கையோடு அனுப்ப மனமில்லாத விஜய் டிவி அவருக்கு ஒரு தொகையை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment