வெட்டுக்கிளியை உயிருடன் சாப்பிட்ட நபர்.!! அந்த வீடியோவை பதிவிட்டு கோபமடைந்த பிரபல நடிகை.

The person who ate the locust alive. The famous actress who got angry after posting the video: நடிகை மீரா சோப்ரா தமிழ் சினிமாவில் எஸ் ஜே சூர்யா உடன் இணைந்து அன்பே ஆருயிரே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். மேலும் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து இவர் ஜாம்பவான், லி, மருதமலை, ஜகன் மோகினி, கில்லாடி, இசை போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இவர் கடைசியாக கில்லாடி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் நாஸ்டிக், மொகாலி பூவு, போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படம் ஹிந்தி, தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது.

தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை முடிவதற்கு முன் கூட்டம் கூட்டமாக வெட்டுக்கிளிகள் விவசாயிகளின் நிலத்தை அழித்து வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில்  இவர் சமீபத்தில் வெட்டுக்கிளியை ஒருவர் உயிருடன் உண்ணும் வீடியோ ஒன்றை பார்த்து உள்ளார்.

இயற்கை நமக்கு கற்று கொடுக்கும் பாடத்தை புரிந்துகொள்ளாமல் நாம் இன்னும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதா என கோபத்துடன் அந்த வீடியோவை தனது ட்வட்டரில் பதிவிட்டு “இந்த வீடியோவை பார்க்க நேர்ந்தது, இது நிஜம்தானா? உண்மையிலேயே மனிதர்கள் வெட்டுக்கிளிகளை இன்னுமும் சாப்பிடுகிறார்களா? கொரோனா வைரஸிடமிருந்து அவர்கள் பாடம் கற்றுக் கொள்ளவில்லையா?” என்று பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment