சமீபத்தில் நடிகர் சூர்யா தயாரிப்பில் உருவான திரைப்படம் தான் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் இத்திரைப்படம் சில தினங்களுக்கு முன்பாக தான் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.
தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள் நடித்திருப்பார். மேலும் இத்திரைப்படத்தில் பல்வேறு அரசியல் சார்ந்த விஷயங்களை இத்திரைப்படத்தின் மூலம் பதிவு செய்திருந்தது மட்டுமில்லாமல். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.
பொதுவாக எந்த ஒரு தயாரிப்பாளரும் இதுபோன்ற திரைப்படங்களை ஊக்குவிக்க யோசிப்பார்கள் ஆனால் சூர்யா மற்றும் ஜோதிகா இவ்வாறு கதையம்சம் உள்ள திரைப்படத்தை தூக்கி வைத்தது இயக்குனர் சார்பிலும் மக்கள் சார்பிலும் நல்ல பாராட்டும் புகழும் உருவாகியுள்ளது.
அதேபோல இத்திரைப்படத்தில் உயரதிகாரிகளுக்கு காவல்துறை காட்டும் விசுவாசமும் அதேசமயம் விவசாயிகளுக்கு காட்டும் விசுவாசமும் தனித்தனியே பிரித்து காட்டி உள்ளார்கள். அதே போல கால்நடை அமைச்சரே ரம்யா பாண்டியன் கேள்வி எழுப்பியதை பார்த்து பலரும் அவரை பாராட்டி உள்ளார்கள்.
இவ்வாறு இந்த திரைப்படத்தில் பல கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளை சுட்டிக் காட்டுவதன் மூலமாக இருப்பதன் காரணமாக பல்வேறு சர்ச்சைகளை இத்திரைப்படம் உருவாக்கியது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை பார்த்த ஹரிஷ் கல்யாண் அவர்கள் இந்த படத்தின் இயக்குனருக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் சொன்ன வாழ்த்துக்கு ரம்யா பாண்டியன் நன்றி தெரிவித்திருந்தார் இதனை பார்த்த ரசிகர்கள் ரம்யா பாண்டியன் உடன் சேர்ந்து நடிக்கும்படி ஹரிஷ் கல்யாண் கோரிக்கை விடுகிறார் என ரசிகர்கள் கமெண்டில் தெரிவித்து வருகிறார்கள்.