அஜித்துக்கும், சூர்யாவுக்கும் இருக்கும் மக்பெரிய ஒரு ஒற்றுமை.. இதுவரை யாரும் அறிந்திடாத தகவல்

திரை உலகில் இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர்கள் ஆரம்பத்தில் பட வாய்ப்பு இல்லாமல் வேறு ஒரு தொழிலை செய்து பின் வெள்ளி திரையில் நுழைந்து பின் கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை வளர்த்துக் கொண்டு இப்போ முன்னணி நடிகர்களாக வளங்குகின்றனர்.

அந்த வகையில் நடிகர் அஜித் ஆரம்பத்தில் மெக்கானிக்காக இருந்து இந்த இடத்திற்கு வந்துள்ளார்.. என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் இப்பொழுது அவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோ.  அடுத்து தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பிடித்திருப்பவர் சூர்யா.. இவர்கள் இருவருமே இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கின்றனர்.

இப்படிப்பட்ட இருவரும் ஆரம்பத்தில் ஒரு சாதாரண வேலையை தான் செய்திருக்கின்றனர் இதில் என்ன அதிசயம் என்றால் இருவரும் ஒரே மாதிரியான வேலையை தான் பார்த்து இருக்கிறார்கள் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. நடிகர் அஜித்குமார் படிப்பை முடித்துவிட்டு  ஒரு கார்மெண்ட்ஸ்  நிறுவனத்தில் பணிபுரிய சென்றுவிட்டார் அங்கு மேலாளருக்கு நிகரான ஒரு பதவியில் இருந்தார்.

இந்த நிலையில் தான் அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதை பயன்படுத்தி தற்பொழுது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நாயகனாக மாறி உள்ளார். அதேபோல நடிகர் சூர்யாவும் கூட திரைக்கு நடிக்க வருவதற்கு முன்பாக கார்மெண்ட்ஸ் மேலாளராக பணிபுரிந்து வந்தார் பின் நேருக்கு நேர் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

அதன் பிறகு ஒவ்வொரு படமாக ஹிட் கொடுத்து இன்று இந்த இடத்தில் இருக்கிறார். இரண்டு பேரும் சினிமாவுக்கு வர பெரிய ஆர்வம் காட்டியது கிடையாது ஆனால் வந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டனர் என்பது தான் உண்மை. இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

Leave a Comment