விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போக மாட்டான்.! இதனால்தான் இன்றும் இவர் சூப்பர் ஸ்டார்.. ரஜினி ரசிகர்கள் நெகிழ்ச்சி…

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் ரஜினி. இவர் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் இந்த ஆண்டு வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் ரஜினி செய்த ஒரு காரியத்தை பிரபல தயாரிப்பாளரான தியாகராஜன் அவர்கள் கூறி ரஜினி ரசிகர்களுக்கு ஞாபகப்படுத்தி நெகிழ்ச்சியடைய அடைய வைத்திருக்கிறார் இந்த தகவல் தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது. அதாவது ரஜினி படத்தில் சிரஞ்சீவி மற்றும் ஸ்ரீதேவி நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு சில காட்ச்சிக்காக வெளியூர் சென்று இருக்கின்றனர்.

அப்போது ஒரு ஹோட்டலில் ரூம் புக் செய்து இருக்கின்றனர். அப்போது இருப்பதிலேயே நடிகர் சிரஞ்சீவிக்கு சிறிய அறையை கொடுத்து விட்டார்கள். ஆரம்பத்தில் இது தெரியாமல் ரஜினி அவர்கள் தன்னுடைய அறைக்கு சென்று இருக்கிறார் அதன் பிறகு சிரஞ்சீவி இடம் பேசுவதற்காக சிரஞ்சீவி அறிக்கை சென்று இருக்கிறார்.

அப்போது அந்த அறை மிகச் சிறியதாக இருப்பதை பார்த்த ரஜினி அவர்கள் அந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் சென்று நம்மளுடைய படத்திற்காக தான் அவரை அழைத்து இருக்கிறோம் அதுமட்டுமல்லாமல் நம்மளை நம்பி தான் அவர் இங்கு வந்திருக்கிறார் அதற்காக அவரை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் அதுவே தமிழனின் கலாச்சாரம் என்று கூறி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் உடனே தன்னுடைய அறையில் சிரஞ்சீவியை தங்க சொல்லுமாறு கேட்டுள்ளார் அது மட்டுமல்லாமல் சிரஞ்சீவி அறையில் ரஜினி அவர்கள் தங்கி இருக்கிறார் இந்த தகவலை தியாகராஜன் கூறி ரசிகர்களை நெகிச்சி அடைய வைத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் அன்றைக்கு விட்டுக் கொடுத்ததால் தான் இன்றுவரையிலும் சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார் என்று ரசிகர்கள் இணையதளத்தில் கூறி நெகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்.

Leave a Comment