கூண்டோடு சிக்கிக்கொண்ட அடுத்த டிக் டாக் கிளி..! யூடியூப்ல என்ன பேச்சு பேசினீங்க வச்சாங்களா ஆப்பு..!

தற்போது சோசியல் மீடியாவை பயன்படுத்தி பல்வேறு நபர்களும் பிரபலமாகி வருகிறார்கள் அந்த வகையில் இவர்கள் பிரபலமாவதற்கு பல்வேறு கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தவும் ஆரம்பித்துவிட்டார்கள். இதற்கு முன்பாக டிக் டாக் செயலி மூலமாக பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு பல்வேறு நபர்கள் பிரபலமாகி உள்ளார்கள் இவர்களைப் போலவே தற்போது சுதந்தி என்பவரும் பல மோசமான வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார்.

இவ்வாறு நடந்த செயலின் மூலமாக இவர் மீது புகார் எழுந்த நிலையில் தற்போது போலீஸ் அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளார்கள்.  அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் உள்ள பாஸ்கரன் என்ற காவல்துறை அதிகாரி அவர்கள் சைபர் குற்றங்களை தடுப்பதற்காகவும் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் கடந்த மாதம் 13ம் தேதி ஒரு பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார் இவ்வாறு அவர் அளித்த புகார் என்னவென்றால் தன்னுடைய கணவரின் புகைப்படத்தை பயன்படுத்தி சமூக வலைதள பக்கத்தில் பல மோசமான வீடியோக்களை வெளியிட்டு வருவதாக புகார் அளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட பொழுது அதில் டிக் டாக் பிரபலம் சுகந்தி தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது இதனை தொடர்ந்து அவர் என்ன செய்கிறார் என்று பார்த்தால் சென்னையில் மேக்கப் கலைஞர் ஆக பணிபுரிந்து வருவதாக தெரிய வந்தது.

surya-2
surya-2

இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறை அதிகாரி பொதுமக்கள் அனைவரும் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் சைபர் குற்றங்களால் பொதுமக்கள் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவற்றை உடனடியாக போலீஸ் அதிகாரியிடம் புகார் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Comment