அடுத்த ஆட்சி பிரேம்ஜி கையில் தான்..! என்ன கொடுமை சார் இது..?

பொதுவாக இசைஞானி இளையராஜாவை தெரியாதவர் எவரும் இருக்க மாட்டார் அந்த வகையில் அவருடைய சகோதரரான கங்கை அமரன் என்பவரும் சினிமாவில் பிரபலமானவர் என்று சொல்லலாம் அந்த வகையில் இவர் இயக்குனராக கோழி கூவுது, கொக்கரக்கோ, எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன், போன்ற பல்வேறு வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்துள்ளார்.

மேலும் இவர் திரைப்படங்கள் இயக்குவது மட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் இசையமைத்தும் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி உள்ளார் அந்த வகையில் இவர் திரைப்படங்களில் பாடல்கள் எழுதுவது போன்ற வேலைகளையும் கூட செய்துள்ளார் அந்த வகையில் பன்முகத்துடன் கொண்டவர் என்று சொல்லலாம் நமது கங்கை அமரரை.

மேலும் நமது கங்கை அமரன் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் அயராத போராடி வருவது மட்டும் இல்லாமல் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதில் வெங்கட் பிரபு என்பவர் பிரபல இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் அதேபோல அவருடைய இளைய மகனான பிரேம்ஜி இசையமைப்பாளராக வலம் வருவது மட்டுமில்லாமல் அவர் பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராகவும் காமெடி நடிகராகவும் நடித்த வருகிறார்.

பொதுவாக இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் பல்வேறு முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கியது மட்டுமில்லாமல் இவர் இயக்கம் திரைப்படங்கள் ஒவ்வொன்றிலும் தன்னுடைய சகோதரர்களான பிரேம்ஜி அவர்கள் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பது வழக்கம் இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பிரண்ட்ஸ் திரைப்படத்தில் பிரேம்ஜி நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது பலரையும் பிரமிக்க வைத்திருந்தது.

அது மட்டும் இல்லாமல்  கங்கை அமரன் தன்னுடைய இரண்டு மகன்களின் ஜாதகத்தை ஜோதிடர் இடம் பார்க்க சென்ற பொழுது மூத்த மகன் பிரபல இயக்குனராக வலம் வருவது மட்டுமில்லாமல் நன்றாக பணம் சம்பாதிப்பார் என்று கூறினார் அதே போல பிரேம்ஜி ஜாதகத்தில் அவர் சிறந்த நடிகராக வலம் வருவது மட்டும் இல்லாமல் அரசியலில் மிகவும் பிரபலமாக இருப்பார் என்றும் கூறியது பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அப்படி என்றால் பிரேம்ஜி இனி அரசியலில்  உதயம் ஆகுவாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment