“பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேற போகும் அடுத்த போட்டியாளர்.! யார் தெரியுமா.? இத்தனை நாள் சும்மா தான் சுத்திவந்தாங்க..

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது ஹாட்ஸ்டார் இல் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 14 போட்டியாளர்கள் மற்றும் வைல்டு கார்டு என்ட்ரி ஆக இரு பிரபலம் என மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் வார இறுதியில் ஒரு போட்டியாளர் எலிமினேஷனிலிருந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்.

மேலும் இந்த எலிமினேஷன் காண நாமினேஷன் ப்ராசஸ் வாரத்தின் முதல் நாட்களில் நடைபெறும் அப்படி இந்த வாரம் நாமினேஷனில் பாலாஜி முருகதாஸ், ஜூலி, சினேகன் மற்றும் சுருதி ஆகிய நான்கு போட்டியாளர்கள் உள்ளனர். அந்த வகையில் இந்த நான்கு போட்டியாளர்களில் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் ஒரு போட்டியாளர் வெளியேறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்  பாலாஜி முருகதாஸ் சினேகன் ஜூலி போன்ற மூன்று போட்டியாளர்களுக்கும் ஓரளவு ரசிகர்கள் உள்ள நிலையில் இந்த வாரம் சுருதி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்பு உள்ளதாக தெரியவருகிறது. மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் மிகக் குறைந்த நாட்களே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் சுருதி என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 5 வது சீசனில் கலந்துகொண்ட போது அதில் தாமரையின் காயினை தவறான முறையில் எடுக்க முயன்றதால் தான் அந்த வாரத்தில் சுருதி வெளியேறினார் என்பது பலரும் அறிந்த ஒன்று தான். மேலும் இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் மற்ற போட்டியாளர்களை விட சற்று சுவாரசியம் குறைவாகவே சுருதி விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் இந்த வார இறுதியில் சுருதி  வெளியேறுகிறாரா அல்லது மக்களின் வாக்குகளில் வேறு ஏதாவது மாற்றம் நடந்து மற்ற போட்டியாளர் யாராவது வெளியேறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Comment