பொன்னியின் செல்வன் நடிகரை கொக்கி போட்டு தூக்கிய கிருத்திகா உதயநிதி.! தயாரிக்கும் ரெட் ஜெயண்ட்..

உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா சினிமாவில் பிரபல இயக்குனராக பணியாற்றி வரும் நிலையில் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி வருகிறார். இவர் மெர்சி சிவா நடிப்பில் வெளிவந்த வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனராக சினிமாவிற்கு அறிமுகமானார் இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி படத்தினை இயக்கி இருந்தார்.

மேலும் இன்னும் சில திரைப்படங்களையும் இயக்கி வந்த கிருத்திகா சில வருடங்களாக படங்களை இயக்காமல் இருந்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு ஜி5 ஓடிடி தளத்தில் வெளியான பேப்பர் ராக்கெட் என்ற வெப் தொடரை இயக்கியிருந்தார்.‌ இந்த படத்தில் ஜெயராமனின் மகன் காளிதாஸ் ஜெயராம் ஹீரோவாக நடித்திருந்தார் இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

இதனை அடுத்து தற்பொழுது புதிய படம் ஒன்றை கிருத்திகா இயக்க இருக்கிறார் அதாவது பொன்னியின் செல்வன் பட நடிகர் இந்த படத்தில் நடிக்க வைக்க இருப்பதாகவும் இந்தப் படம் ரெட் ஜெயண்ட் தயாரிப்பதாகவும் ‌ தகவல் வெளியாகி உள்ளது. மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி போன்ற ஏராளமான நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் மூலம் இவர்கள் மூவருக்குமே தமிழ் சினிமாவில் மார்க்கெட் உயர்ந்துள்ளது. அப்படி ஜெயம் ரவி ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் நிலையில் இதனை அடுத்து கிருத்திகா உதயநிதி இயக்க இருக்கும் இந்த புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருக்கிறாராம் மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழில் ஓகே கண்மணி, மெர்சல் போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் நித்யா மேனன். மேலும் கடைசியாக இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவ்வாறு கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த படத்தினை உதயநிதியின் நிறுவனம் ரெட் ஜெயன்ட் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் தான் இசையமைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment