பிக்பாஸில் புதிய தலைவர்… இனிதான் வீடு இரண்டாக போகுது.! விழி பிதுங்கி நிற்கும் சக போட்டியாளர்கள்.!

பிக்பஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் இந்த நிலையில் இந்த வாரத்திற்கான தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு மாதங்களை கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது, இந்த நிகழ்ச்சியை மக்கள் விரும்பிப் பார்த்து வருகிறார்கள் ஏனென்றால் கொரோனா காலகட்டத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்காக அமைந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கேப்டனாக இருந்தது ரமேஷ்,  வழக்கமாக ஒரு வாரம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டவர்கள். மூவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒரு டாஸ்க் வைக்கப்பட்ட அந்த இடத்தில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தான் பிக் பாஸ் வீட்டில் தலைவராக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த நிலையில் முதல் முறையாக பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரும் தலைவர் போட்டியில் போட்டியிடப் போகிறார்கள் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது, இதற்கான டாஸ்க் பிக்பாஸ் வைக்கிறார்.

அந்த டாஸ்க் இல் அனிதா வெற்றி பெறுகிறார் அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார தலைவராக அனிதா அறிவிக்கப்பட்டவுடன் பாலாஜி மற்றும் சக போட்டியாளர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தார்கள் ஆனால் அர்ச்சனாவும் அவரது குரூப் அவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது.

இந்த வார தலைவர் அனிதாவாக இருப்பதால் அவர் நாமினேட் செய்யப்பட வாய்ப்பு இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்,  அதனால் அடுத்த வாரமும் பிக் பாஸ் வீட்டில் அனிதா இருப்பார்.

Leave a Comment