இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட்டில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற போகும் பெண் போட்டியாளர்.? யார் தெரியுமா.?

ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 14 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 40 நாட்களை கடந்து பயணித்து வருகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் கூடுதலாக 3 வைல்டு கார்டு என்ட்ரியாக சுரேஷ் சக்கரவர்த்தி, சதீஷ் மற்றும் ரம்யா பாண்டியன் போன்ற மூன்று பிரபலங்களும் பிக்பாஸ் அல்டிமேட்டில் இணைந்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சி 70 நாட்கள் வரை மட்டும் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது வரை 11 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் அவர் சில காரணங்களால் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற அவருக்கு பதில் தற்போது நடிகர் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட்டை  தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் சிம்பு இந்த நிகழ்ச்சிக்கு வந்தது மக்கள் மற்றும் போட்டியாளர்கள் என பலரும் சந்தோஷத்தை கொடுத்தது. பிக்பாஸ்  புது புது டாஸ்குகள்  கொடுத்து போட்டியாளர்கள் அனைவரும் உற்சாகமாக விளையாட்டு வருகின்றன. அதில் இந்த வாரம் போட்டியாளர் அனைவரும் ஜோடி ஜோடியாக இணைந்து பிக் பாஸ்.

கொடுக்கும் பல போட்டிகளை சிறப்பாக விளையாடி வருகின்றனர். பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வார இறுதியில் ஒரு போட்டியாளர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார். அந்தவகையில் இந்த வாரம் பாலா, ஜூலி, சினேகன், சுருதி போன்ற நான்கு போட்டியாளர்களும் நாமினேட் ஆகியிருந்த..

நிலையில் இதில் சினேகன் மற்றும் சுருதி ஆகிய இருவரும் மக்களின் குறைந்த ஓட்டுகளை வாங்கி இருக்கின்றனராம். எனவே இவர்கள் இருவரில் அதிகம் சுருதி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Comment