ஆரியனை தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் முக்கிய நபர்.? இனி TRP – க்கு திண்டாட்டம்தான்..

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் தன் பக்கம் திசை திருப்பி டாப் சீரியல்களில் ஒன்றாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் குடும்பத்தலைவியாக பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ராவின் வெகுளித்தனமான நடிப்பு பலரையும் கவர்ந்து இழுத்துள்ளது.

கணவர் மாமனார் மாமியார் மருமகள் மகன் என அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்ளும் பாக்கியலட்சுமியை அவரது கணவருக்கு பிடிக்காமல் போகின்றன. தற்போது கூட பாக்கியலட்சுமியின் கணவர் அவரது முன்னாள் காதலி ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்காக பாக்கியாவிடம் இருந்து விவாகரத்து பெற பல வழிமுறைகளை செய்து வருகின்றார்.

மேலும் விவாகரத்துப் பெற பாக்கியாவை ஏமாற்றி கோர்ட் வரை அழைத்துச் சென்றுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க குடும்ப செலவிற்கு பணம் பத்தாமல் பாக்கியா பல சோதனைகளை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் இந்த சீரியல் டிஆர்பியில் தொடர்ந்து முன்னிலையில் வகிக்க முக்கிய காரணம் சுசித்ராவின் நடிப்பு ஆனால் தற்போது இவர் இந்த சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றனர்.

மேலும் சுஜித்ராவுக்கு பதில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் பிரபல நடிகையான ராதிகா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றன.நடிகை ராதிகா சின்னத்திரையில் வாணி ராணி, சித்தி போற்ற சீரியல்களில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது. ஆனால் இவர் சுஜித்ரா அளவிற்கு நடிப்பாரா என ரசிகர்களின் கேள்வி குறியாக இருந்து வருகின்றன.

மேலும் ஒரு சீரியல் வெற்றிபெற அந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் முக்கிய காரணம் ஆவார். அவர் தற்போது இந்த சீரியலில் இருந்து விலகுவதால் பாக்யலட்சுமி சீரியல் டிஆர்பி அடிவாங்க பெரிதும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றன.

Leave a Comment