பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வந்த முக்கிய பிரபலம் – விலகயுள்ளதாக தகவல்.? அந்த பிரபலம் யார் தெரியுமா.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் காமெடி நிகழ்ச்சிகள் ஆகிய அனைத்தும் மக்கள் பலரின் ஃபேவரட் நிகழ்ச்சிகளாகும். அந்த வகையில் விஜய்யில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு சிறந்த கதை களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் ஒரு இல்லத்தரசி படும் கஷ்டங்கள் போராட்டங்கள் போன்றவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த சீரியலில் மிகவும் வெகுளி தனமாக இருக்கும் பாக்கியலட்சுமியின் கணவர் கோபி அவரது கல்லூரி காதலியான ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்காக பாக்கியாவை ஏமாற்றி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளார்.

இப்படி பல ட்விஸ்டுகளுடன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த சீரியல் டிஆர்பிலும் தொடர்ந்து முன்னிலையில் வகிக்கும் ஒரு சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த சீரியலில் இருந்து ஒரு முக்கிய பிரபலம் வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாக்யலட்சுமி தொடரில் பாக்யாவின் மூத்த மகனாக செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆரியன்.

சமீபத்தில்தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் நாயகியான ஷபானாவை திருமணம் செய்து கொண்டார். திருமணமான பிறகும்  பாக்யலக்ஷ்மி தொடரில் தொடர்ந்து நடித்து வரும் செழியனுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதே ஆசையாம்.

அதனால் இந்த சீரியலில் இருந்து விலகி சினிமா வாய்ப்புகளைப் பெற நாம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை செய்யலாம் என்பதற்காக இந்த சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செழியன் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் அவருக்கு பதில் கண்டிப்பாக வேறு ஒரு பிரபலமும் மாற்றப்பட்டு வருவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment