25 நாளை நிறைவு செய்த “தி லெஜண்ட்” படம் – சரவணன் அருள் போட்ட பதிவால் கொண்டாடும் ரசிகர்கள்.!

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் இருப்பவர்கள் அண்மைக்காலமாக படங்களில் நடித்து அசத்தி வருகின்றனர் அந்த வகையில் தி லெஜன்ட் சரவணா ஸ்டோர் ஓனர் சரவணன் அருள் தற்பொழுது படங்களில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டியுள்ளார் முதலாவதாக ஜெடி – ஜெர்ரி  இயக்கத்தில் உருவான தி லெஜண்ட் படத்தில் நடித்து..

சினிமா உலகில் என்ட்ரி கொடுத்துள்ளார் சரவணன் அருள். தி லெஜெண்ட் திரைப்படத்தில் இவருடன் கைகோர்த்து ஊர்வசி ரவுத்தேலா, யோகி பாபு, விவேக், நாசர், பிரபு, விஜயகுமார், ரோபோ ஷங்கர் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர் இந்த படம் ஆக்சன் காமெடி சென்டிமென்ட் என அனைத்தும்..

கலந்த கலவையான திரைப்படமாக இருந்ததால் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இந்த படம் வசூல் வேட்டையும் நடத்தியது சரவணன் அருள் நடித்த முதல் படமே படகுழு எதிர்பார்த்ததைவிட பிரம்மாண்டமான வசூல் வேட்டை நடத்தி அசத்தியது இதுவரை மட்டுமே இந்த திரைப்படம் 12.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சரவணன் அருள் அடுத்த படத்தில் நடிப்பார் என தெரிய வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் தி லெஜெண்ட் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி இதுவரை 25 நாட்களை நிறைவு செய்துள்ளது. இப்பொழுது கூட தி லெஜெண்ட் திரைப்படம்.

சென்னையில் உள்ள முக்கியமான மல்டிபிளக்ஸ் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படமே இவருக்கு 25 நாட்களை தொட்டு உள்ளதால் தற்பொழுது மற்ற நடிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது இந்த நிலையில் தி லெஜெண்ட் சரவணன் தனது சமூக வலைதள பக்கத்தில் மக்களின் பேராதரவுடன் மிகப்பெரிய வெற்றி என கூறியுள்ளார்.

Leave a Comment