மனோபாலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காத முன்னணி நடிகர்கள்.. இவங்க எல்லாம் கல்நெஞ்சக்காரர்களா.?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் மனோபாலா. இவர் முதலில் கிழக்கே போகும் ரயில் என்னும் படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்த்து பின் ஆகாய கங்கை என்னும் படத்தை இயக்கிய அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து டிசம்பர் 31, சிறைப்பறவை, ஊர்காவலன், மூடு மந்திரம் என அடுத்தடுத்த ஹிட்..

படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருந்த மனோபாலா 1979 ஆம் ஆண்டு புதிய வார்ப்புகள் என்னும் படத்தில் நடித்து அறிமுகமனார். அதனைத் தொடர்ந்து ரஜினி, விஜயகாந்த், அஜித், விஜய் போன்ற டாப் நடிகரின் படங்களில் முக்கிய மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த மனோபாலா நேற்று உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை ஏய்தினார்.

விஷயத்தை கேள்விபட்ட பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். வர முடியாதவர்கள் மனோபாலாவின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இரங்கல் தெரிவித்தனர். ஆனால் அவருடன் பல்வேறு படங்களில் நடித்த ஒரு சில நடிகர்கள் அவர் இறப்புக்கு  நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை என்றாலும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு  இரங்கலாயாவது தெரிவித்திருக்கலாம் அதை கூட சில முன்னணி நடிகர்கள் செய்ய தவறிவிட்டனர் இதனை பார்த்த பலரும் விமர்சித்து வருகின்றனர். அவர்கள் யார் யார் என்பது குறித்து பார்ப்போம்..

1. நடிகர் அஜித்தின் தந்தை மறைவிற்கு பல சினிமா பிரபலங்கள் வந்து  அஞ்சலி செலுத்தினார் ஆனால் மற்ற சினிமா பிரபலங்கள் மறைந்தால் நடிகர் அஜித் மட்டும் கலந்து கொள்வதே இல்லை அதுபோல காமெடி நடிகரும், இயக்குனருமான மனோபாலாவின் மறைவுக்கு அவர் வரவில்லை ஆனால் அஜித் சார்பாக அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

2. சிவகுமார் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் அவருடைய இளைய மகன் கார்த்தி டுவிட்டர் பக்கத்தில் மனோபாலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார் ஆனால் சூர்யா இதுவரை ட்வீட் கூட போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 3. தனுஷின் யாரடி நீ மோகினி  மற்றும் பல படங்களில் மனோபாலா நடித்திருந்தார். அவருடைய இறப்புக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்காதது ரசிகர்களுக்கு பெரும் கடுப்பை கிளப்பி உள்ளது.

 

Leave a Comment