மாதவனை ஒழித்துக் கட்ட வில்லத்தனமாக நம்பியார் வேலை பார்த்த முன்னணி நடிகர்.! கால் வைக்கிற இடம் எல்லாம் கன்னி வெடியா.?

அப்பாஸ் தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் பல முன்னணி நடிகராக  நடித்து வந்தார்கள் அந்த வகையில் சாக்லேட் பாய் என்ற அந்தஸ்துடன் வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ் அதுமட்டுமில்லாமல் மேடி என்ற அந்தஸ்துடன் வளம் வந்தவர் நடிகர் மாதவன். அப்பாஸ் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்புவின் உறவினர் ஆவார் அதனால் அவருக்கு சினிமாவில் மிக எளிதாக வாய்ப்பு கிடைத்தது.

அதுமட்டுமில்லாமல் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார் ஒரு காலகட்டத்தில் அப்பாஸ் போல் மாப்பிள்ளை வேண்டுமென பல பெண்கள் ஏங்கியதுண்டு அந்த அளவு அப்பாஸ் பெண்களை வெகுவாக கவர்ந்து வைத்திருந்தார். ஆனால் மாதவன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காமெடி வேடம் ஏற்று நடித்து வந்து அதன் மூலம் வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தார்.

இருந்தாலும் அப்பாஸ் மற்றும் மாதவன் இருவரும் ஒரே நேரத்தில் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார்கள் வெள்ளி திரையில் ஆரம்ப காலகட்டத்தில் நடிக்கும் பொழுதே மாதவனுக்கு மிகப்பெரிய பெண்கள் ரசிகர் கூட்டம் இருந்தது அப்பாஸ் மற்றும் மாதவன் இருவரும் மின்னலே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படம் மாபெரும் ஹிட் திரைப்படமாக அமைந்தது இன்று வரை அசைக்க முடியாத ஒரு காதல் திரைப்படமாக இருந்து வருகிறது.

நடிகர் அப்பாஸ் அவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்து நடிகர் மாதவன் மீது ஒரு பொறாமை இருந்து வந்துள்ளது இந்த நிலையில் ரிலாக்ஸ் என்ற கன்னட மற்றும் தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த வந்தார்கள் இந்த திரைப்படத்தில் இருவருக்கும் சமமான கதாபாத்திரமாக இருந்தாலும் அப்பாஸ் மாதவனின் கதாபாத்திரத்தை கொஞ்சம் காமெடியனாக காட்ட வைத்து விட்டார். இதனால் மாதவன் மார்க்கெட் சரியும் என அப்பாஸ் எதிர்பார்த்தார்.

ஆனால் மூன்று திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த மாதவன் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. அந்த நேரத்தில் அலைபாயுதே திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறியது பின்பு அறிமுக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மின்னலே என்ற திரைப்படத்தில் மாதவனை நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்தார். அதேபோல் அந்த திரைப்படத்தில் துணை கதாநாயகனாக நடிக்க  நடிகர் அப்பாஸை  சிபாரிசு செய்தார்கள்.

அந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறியது. இன்று அளவும் மின்னலை திரைப்படம் மாபெரும் காதல் திரைப்படமாக பார்க்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் சமீபத்தில் அப்பாஸ் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்பொழுது மின்னலே திரைப்படத்தில் தன்னை வைத்து இயக்குனர் பல காட்சிகள் எடுத்தார்கள் ஆனால் மாதவன் அந்த காட்சியை அனைத்தையும் வெட்டி எறிய சொல்லிவிட்டார் என மிகப் பெரிய குற்றச்சாட்டை மாதவன் மீது ஏற்படுத்தினார் அப்பாஸ்.

இப்படி மாதவன் மார்க்கெட்டை ஒரேடியாக காலி செய்ய அப்பாஸ் நம்பியார் போல் வேலை பார்த்துள்ளார் என பலரும் கூறி வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version