படம் வெளியான 2 நாளில் வந்தியதேவன் மீது வழக்கு பதிவு செய்த வழக்கறிஞர்.! மணிரத்தினத்திற்கு ஏற்பட்ட மேலும் ஒரு சோதனை…

இயக்குனர் மணிரத்தினம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி உலகம் எங்கும் உள்ள பல திரையரங்குகளில் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த படம் கல்கியின் நாவலை தழுவி உருவாகப்பட்ட திரைப்படத்தில் குந்தவை, ஆதித்த கரிகாலன், நந்தினி, வந்தயத்தேவன், அருள்மொழிவர்மன், என பல முக்கியமான கதாபாத்திரங்கள் உள்ளன.

இந்த படத்தில் அமைந்துள்ள வந்தியதேவன் கதாபாத்திரம் மிக முக்கியமான கதாபாத்திரம் என்று பொன்னியின் செல்வன் நாவலில் குறிக்க பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்த கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி அவர்களை நடிக்க வைத்தார் மணிரத்தினம்.

தற்போது கார்த்தியின் வந்தியத்தேவன் கதாபாத்திரம் மீது பிரபல வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கில் வந்தியத்தேவன் கதாபாத்திரம் பொருத்தவரை பெண்களை ரசிக்கும் கதாபாத்திரம் தான், அதே போல் வந்தயத்தேவன் ஒரு மாபெரும் வீரன் ஆவார் என்று வழக்கு தொடர்ந்து உள்ளார்.

பொன்னின் செல்வன் திரைப்படத்தில் மணிரத்தினம் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை சற்று ஓவராக காண்பித்துள்ளார் என்று அந்த வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். மணிரத்தினம் தவறாக சித்தரித்துள்ளதாக வழக்கு தொடர்ந்து உள்ளார்.

படம் வெளியாகி இரண்டு நாட்களிலேயே 150 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது இந்த நிலையில் வந்தியத்தேவன் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார் பிரபல வழக்கறிஞர். இதனை பார்த்த ரசிகர்கள் வழக்கு போட வேற ஒற்றுமே இல்லையா என விமர்சித்து வருகிறார்கள்.

ஏனென்றால் கார்த்தியின் கதாபாத்திரமான வந்தியத்தேவன் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது இந்த நிலையில் இப்படி ஒரு வழக்கு பதிவு தேவையா என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

பிரம்மாண்டமான திரைப்படம் எடுத்தால் இப்படி ஒரு எதிர்ப்புகள் கிளம்பும் அதையெல்லாம் தாண்டியும் பல படங்கள் வெற்றி அடைந்துள்ளது இந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படமும் உள்ளது. இந்த சவாலை மணிரத்தினம் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று தற்போது சமூக வலைதளத்தில் இந்த தகவல் வைரல் ஆகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment