தொகுப்பாளர் மற்றும் அவரின் மனைவியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மறைந்த சித்திரா.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை vjசித்ரா. இவர் பிரபல நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இவர் இறந்துவிட்டார் என்பதை கூட யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அந்த வகையில் இவருடைய கணவர் ஹேமன் நாத் செய்த பிரச்சனையால் தான் சித்ரா மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இன்றளவும் ரசிகர்கள் சித்திரவதை மிஸ் செய்வதாக கூறி வருகிறார்கள்.

இவர் vj-வாக பணி புரியாத தொலைக்காட்சியே கிடையாது. அந்த அளவிற்கு மிகவும் கஷ்டப்பட்டு பிரபலம் அடைந்தார். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மூலம் இவர் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர் பட்டாளமே உருவானது.

இந்த சீரியலில் கதிர்-முல்லை கேரக்டரில் நடித்து வரும் குமரனும்-சித்ரா இருவருமே ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்கள்.இவர்களுக்கென்றே இந்த சீரியலை பார்த்து வந்தார்கள் எனவேTRP-யில் தொடர்ந்து இந்நாடகம் முதலிடத்தில் இருந்து வந்தது.

தற்பொழுது பாண்டியன் ஸ்டோர் சீரியலின் சித்ராவிற்கு பதிலாக பாரதிகண்ணம்மா சீரியல் அறிவு என்ற கேரக்டரில் நடித்து வந்த காவியா தற்போது நடித்து வருகிறார்.  இவரும் சித்தரா இல்லாத குறையைத் தீர்க்க வேண்டும் என்று தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தொகுப்பாளரும்,நடிகருமான மாகாபா மற்றும் அவர் மனைவி ஆகியோர்களுடன் சித்ரா எடுத்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

VJ
VJ

Leave a Comment