பிக்பாஸ் 5 -ல் கலந்து கொண்டதற்காக இன்னும் சம்பளம் தரவில்லை புலம்பும் போட்டியாளர்.? யார் அது தெரியுமா.?

தமிழில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் தாமரைச்செல்வி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஒன்றும் தெரியாமல் வந்து இருந்தாலும் பிக்பாஸ் வீட்டிற்குள் ஒவ்வொன்றையும் கற்றுக்கொண்டு சிறப்பாக விளையாடி வந்தார்.

மேலும் இவரது வெள்ளந்தியான பேச்சியினால் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரையும் கவர்ந்துள்ளார்.  அதனால் இவர் பிக்பாஸ் வீட்டில் மக்களின் வாக்குகளின் படி நீண்ட நாட்கள் பயணித்துள்ளார். மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் நடந்த ஒரு டாஸ்கில் தாமரை அவரது குடும்பம் பற்றி பேசியுள்ளார்.

அதில் தாமரைச்செல்வி நாங்கள் மிகவும் ஏழ்மையான குடும்பம் இளம் வயதிலேயே வறுமையின் காரணமாக நாடகத்துறையில் சேர்ந்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.  மேலும் அவருக்கு கடன்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.  தாமரையின் கணவர் மற்றும் மகன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து இருந்தனர்.

தற்போது பிக் பாஸ் 5 முடிஞ்சு சில வாரங்களே ஆன நிலையிலேயே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் தாமரைச்செல்வி கலந்துகொண்டார்.  இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் அவர் தனக்கு பிக் பாஸ் 5 யில் கலந்து கொண்டதற்கான சம்பளம் இன்னும் தரவில்லை என கூறியிருந்தார். மேலும் வீட்டில் இருக்கும் ஏதாவது பொருட்களை உடைத்தல் அதற்கான பணத்தை சம்பளத்தில் பிடித்து விடுவார்கள்.

என தாடி பாலாஜி சொல்ல அதற்கு தாமரை எனக்கு இன்னும் சம்பளமே தரல, இதுல எவ்வளவு தருவார்கள் என்று இன்னும் தெரியவில்லை எனக் கூறியிருந்தார். அதற்கு தாடி பாலாஜி அதெல்லாம் கரெக்டா தந்து விடுவார்கள் என தெரிவித்துள்ளார் .

Leave a Comment