ரஜினியை பிச்சைக்காரர் என நினைத்து 10 ரூபாய் கொடுத்த பெண்.! அதன் பிறகு நடந்ததுதான் தரமான சம்பவம்.

Rajini : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்று வரை உச்ச நடிகராக இருந்து வருகிறார் மேலும் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் நடிப்பதற்கு நான் நீ என பல நடிகர்கள் போட்டி போடுகிறார்கள். வாழ்க்கையில் ஒரு முறையாவது சூப்பர் ஸ்டாருடன் நடித்து விட வேண்டும் என பலருக்கும் எண்ணம் இருக்கிறது.

அதேபோல் சூப்பர் ஸ்டார் திரைப்படம் வெற்றி பெற்றாலே உடனே இமயமலைக்கு சென்று வருவார். அந்த வகையில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் இமயமலை பயணத்தில் இருந்தார்.

அப்படி இருக்கும் நிலையில் ஒருமுறை கோவிலின் தூணில் ரஜினிகாந்த் அமர்ந்து சாய்ந்து கொண்டிருந்தார் வழக்கம் போல் எந்த ஒரு மேக்கப் இல்லாமலும் சாதாரண மனிதனைப் போல் இருந்தார் இது ரஜினி தானா என்று ரசிகர்கள் கண்டுபிடிப்பதற்கு இரண்டு முறை பார்க்க வேண்டும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அமர்ந்து இருப்பதை பார்த்து ஒரு பெண் இது ரஜினி என்று உணராமல் ஏதோ பிச்சைக்காரர் போல் இருக்கிறார் என நினைத்து அந்தப் பெண்மணி அவரிடம் 10 ரூபாய் அன்பளிப்பாக கொடுத்துள்ளார். இந்த கதையை நேரில் பார்த்துக் கொண்டிருந்த பெண்மணி சொன்னது.

இதுவே ரஜினிகாந்த் இருக்கும் நிலைமையில் வேறு ஒருவர் யாராவது இருந்தால் நடப்பதே வேறு என்ன செய்திருப்பார்கள் என்று யூகிக்க முடியாது ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் அந்த பத்து ரூபாயை வாங்கிக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து ரஜினிகாந்த் தன்னுடைய காரில் சென்றார் அப்பொழுதுதான் அன்னதானம் செய்த அந்த பெண் தவறு செய்ததை உணர்ந்தார்.

உடனே அந்த வாகனத்திற்கு விரைவாக ஓடி வந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் மன்னிப்பு கேட்டார் அதற்கும் ரஜினிகாந்த் புன்னகையை பரிசாக கொடுத்தார் என தகவல் வெளியாகி உள்ளது.