கட்டின பொண்டாட்டி கூட வெயிட் பன்னமாடாங்க.. சூர்யாவுக்காக இரவு 11.30 மணி வரை வாசலிலேயே காத்திருந்த பிரமாண்ட நடிகர்…

முன்னணி நடிகரான நடிகர் சூர்யாவை பார்க்க வேண்டும் என்பதற்காக இரவு 11:30 மணி வரை சாப்பிடாமல் காத்திருந்த பிரபலம் குறித்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் இதனை அறிந்து கொண்ட ரசிகர்கள் அந்த பிரபலத்தை நினைத்து பெருமைப்பட்டு வருகிறார்கள். மேலும் அந்தப் பிரபலம் இரவு 11:30 மணி ஆகியும் சாப்பிடாமல் ஹோட்டலில் தன்னுடைய அறையின் கதவை திறந்து வைத்து காத்திருந்திருக்கிறார்.

அதாவது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூர்யா சமீப காலங்களாக தொடர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் இவர் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்று வரும் நிலையில் இவர் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்று உள்ளார்.

அங்கு பிரபாஸ் மற்றும் சூர்யா இருவரின் படப்பிடிப்பும் ஒரே இடத்தில் நடைபெற்று உள்ளது. எனவே சூர்யாவை பார்த்த பிரபாஸ் அவரிடம் பேசிவிட்டு பிறகு டின்னருக்கு அழைத்து உள்ளார் ஆனால் சொன்னபடி சரியான நேரத்திற்கு சூர்யாவால் சாப்பிட வர முடியவில்லை இருப்பினும் பிரபாஸ் சூர்யாவிற்காக காத்துள்ளார். இது குறித்து சூர்யா சமீப பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் அதாவது சூர்யா கூறியதாவது, பிலிம் சிட்டியில் பிரபாஸை சந்தித்தேன் நான் காத்திருந்தேன் இன்று இரவு இருவரும் சேர்ந்து சாப்பிடலாம் என்றார் சரி என்றேன் ஹோட்டல் சாப்பாடு அல்லது ப்ரொடக்ஷன் சாப்பாடு என்று நினைத்தேன்.

மாலை 6 மணிக்கு முடிய வேண்டிய படப்பிடிப்பு மணி 8, 10 என கடைசியில் இரவு 11:30 மணிக்கு தான் முடிந்தது அதுவரையிலும் எனக்காக பிரபாஸ் காத்திருந்தார். நாளை அவரை சந்தித்து சாரி சொல்லி விடலாம் என்று நினைத்தேன் எனவே நான் தங்கி இருந்த ஹோட்டலுக்கு சென்றேன் அப்பொழுது காரிடரில் நடந்து சென்ற பொழுது பிரபாஸ் அறையின் கதவு திறந்திருந்தது என்னை பார்த்ததும் வெளியே வந்து சார் நான் ரெடி நீங்கள் குளித்துவிட்டு வாங்க என்றார் நான் அப்படியே ஷாக் ஆகிவிட்டேன் இரவு 11:30 மணி வரை அவர் சாப்பிடவில்லை.

எனக்காக காத்துக் கொண்டிருந்தார் அவர் வீட்டில் அம்மா சமைத்த உணவுடன் காத்திருந்தார். அவர் அம்மா சமைத்த பிரியாணியை சாப்பிட்டேன் அது போன்று சுவையான பிரியாணியை நான் இதுவரையில் சாப்பிட்டதே இல்லை என சூர்யா மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இவ்வாறு பிரபாஸ் பொதுவாக தனக்கு பழக்கமானவர்களுக்கு எப்பொழுதும் வீட்டில் சமைத்த உணவுகளை தருவதை வழக்கமாக வைத்திருப்பாராம்  இவ்வாறு இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் பிரபாஸை பாராட்டி வருகிறார்கள்.

Leave a Comment