இந்தப் புகைப்படத்தில் இருக்கும் சிறுமி தான் இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை.! யார் என்று தெரியுமா.?

சமீபகாலமாக முன்னணி நடிகைகள் பலரும் தங்களுடைய சிறுவயது புகைப்படங்களை வெளியிட்டு சிறு வயதில் எப்படி இருந்தேன் என ரசிகர்கலுக்கு காட்டுவதற்காகவே புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில்  நடிகை வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய சிறுவயது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் சரத்குமாரின் முதல் மனைவியாக சாயா சரத்குமாருக்கு பிறந்தவர் தான். இவர் முதன்முதலில் தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தாரை தப்பட்டை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகை என்று பெயரெடுத்தவர்.

இதனைத் தொடர்ந்து வரலட்சுமி சரத்குமார் நல்ல கதை உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் அவருக்கு வில்லி கதாபாத்திரம் மிகவும் கன கச்சிதமாக பொருந்தியது அதனால் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தால் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் வில்லி கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார் அதனால் இவர் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

மேலும் விஜயுடன் சர்க்கார் விஷாலுடன் சண்டக்கோழி ஆகிய திரைப்படங்கள் வில்லி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் கவர்ந்தார் இந்த நிலையில் பல நடிகைகள் தங்களுடைய சிறுவயது புகைப் படங்களை வெளியிடுவது போல் நடிகை வரலட்சுமி சரத்குமார் அவர்களும் தன்னுடைய சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதாவது தன்னுடைய பிறந்த நாள் என்பதால் தான் சிறுவயதில் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் கூறியுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரளாகி வருகிறது.

varalakshmi
varalakshmi

Leave a Comment