இரண்டு கால்களிலும் சிகிச்சை சிறுநீர் கழிக்க பைப் கண்ணீர் சிந்த வைக்கும் யாஷிகாவின் முதல் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை என பெயர் எடுத்தவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த் இவர் சமீபத்தில் கார் விபத்தின் காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் அந்த வகையில் கடந்த வாரங்களுக்கு முன்பாக தான் நடித்த திரைப்படம் குறித்து  ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தார்.

அந்தவகையில் நடிகை யாஷிகா கார் விபத்தின் காரணமாக வள்ளி செட்டி பவானி என்ற பெண் உயிரிழந்துள்ளார். இவ்வாறு தனக்கு நடந்த விபத்தின் காரணமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள அனைத்து புகைப்படங்களையும் நடிகை யாஷிகா டெலிட் செய்துவிட்டார்.

இந்நிலையில் தன்னுடைய உடல் நலம் குறித்து யாஷிகா தற்போது ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார் அதில் என்னுடைய இடுப்பில் இருக்கும் பல்வேறு எலும்புகளும் முறிவடைந்துவிட்டது மட்டுமின்றி கால் எலும்புகளும் முறிந்துவிட்டன.

இதன் காரணமாக தீவிர சிகிச்சைக்கு பிறகு நான் ஓய்வு எடுத்து வருகிறேன். மேலும் என்னால் இன்னும் ஐந்து மாதத்திற்கு நிற்கவும் நடக்கவும் முடியாது என மருத்துவர் கூறியது மட்டுமல்லாமல் என்னுடைய அன்றாட தேவைகள் கடமைகள் அனைத்துமே இந்த படுக்கையில் தான்.

மேலும் என்னால்  எந்த பக்கமும் திரும்பி கூட பார்க்க முடியாது ஏனெனில் என்னுடைய முதுகில் ஏற்பட்ட காயம் அந்த அளவிற்கு இருக்கிறது.  என்னதான் பல அடிபட்டாலும் என் முகத்திற்கு மட்டும் எதுவுமே ஆகவில்லை. இது எனக்கு மறுபிறவி தான்.

yashika-1
yashika-1

என்னை கடவுள் மிகவும் தண்டித்து விட்டார் மேலும் சமீபத்தில் வீடு திரும்பிய யாஷிகா ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தில் அவர் காலில் கட்டு இருப்பது மட்டுமல்லாமல் சிறுநீர் கழிக்க அவருக்கு டியூப் பொருத்தப்பட்டுள்ளது இதை பார்த்த ரசிகர்கள் பலரும் கண்கலங்கி வருகிறார்கள்.

yashika-2
yashika-2

Leave a Comment