“காத்து வாக்குல ரெண்டு” காதல் படத்தில் முதன்முதலில் நடிக்க இருந்த நடிகர், நடிகை யார் யார் தெரியுமா.. வெளிவந்த தகவல்.!

நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமா உலகிற்கு பல படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் இப்பொழுது கூட இவர் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி ஆகியோர்களை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தை வெற்றிகரமாகக் எடுத்து முடித்துள்ளார் அடுத்த மாதம் இந்த திரைப்படம் கோலாகலமாக வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் விஜய்சேதுபதி, சமந்தா, நயன்தாரா ஆகியவர்களை காதலிக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் கூட அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதியும், நயன்தாராவும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பும் உச்சத்தில் இருக்கிறது இவர்கள் இருவரும் இதற்கு முன்பாக..

இமைக்கா நொடிகள், நானும் ரௌடி தான் போன்ற படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர் தற்போது மூன்றாவது முறையாக இந்த படத்தில் பணியாற்றிய உள்ளதால் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது வேறுசில நடிகர், நடிகை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து விலாவாரியாக பார்ப்போம். இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த படத்தின் கதைக்கு ஏற்றவாறு டாப் ஹீரோவான சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க முதல் சாய்ஸாக செய்து உள்ளார் ஆனால் சில காரணங்களால் அவர் இந்த படத்தை தவற விட்டுவிட்டார்.

அதேபோல இந்த படத்தில் சமந்தா நடித்த கதாபாத்திரத்தில் முதன்முதலில் திரிஷா தான் நடிக்க அதிக வாய்ப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது ஆனால் திரிஷாவுக்கும், நயன்தாராவுக்கும் இடையே மறைமுகமாக ஒரு சண்டை போய்க் கொண்டிருப்பதால் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment