அஜித்தின் சினிமா வாழ்க்கையை திருப்பி போட்ட படம் – ஒரு நாளில் மட்டுமே 25,0000 ரசிகர் மன்றம் ஓபன்.!

நடிகர் அஜித்குமார் தனது 61 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இரண்டு கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு புனேவில் தொடங்கப்பட இருக்கிறது. இதில் அஜித் கலந்து கொள்ள இருக்கிறார். இத்துடன் படப்பிடிப்பு முடியும் என தெரிய வருகிறது.

இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், நடிகர் வீரா, சமுத்திரகனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாகுவதால் படத்தில் ஆக்சனுக்கு பஞ்சம் இருக்காது என தெரிய வருகிறது.

ரசிகர்களும் இந்த படத்தை பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு நடிகர் அஜித் அடுத்ததாக நயன்தாராவின் கணவனும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் முதல் முறையாக கைகோர்த்து தனது 62 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகிய வண்ணமே இருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தை பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. நடிகர் அஜித்குமார் ரசிகர் மன்றத்தை கலைத்து இப்பொழுது ஓடிக்கொண்டு இருக்கிறார் ஆனால் ரசிகர்கள் அவரை நாலுக்கு நாள் பின் தொடர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அஜித் படத்தை இயக்கிய சரண் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்

அதாவது அமர்க்களம் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது இந்த படம் அஜித்தின் கேரியரை மாற்றி அமைத்தது அதுவரை காதல் மன்னனாக ஓடிக் கொண்டிருந்த அவருக்கு ஆக்சன் ஹீரோவாக கொடுத்தது அமர்க்களம் திரைப்படம் தான். இந்த படம் வெளிவந்து வெற்றி அடைந்தது படம் வெளிவந்த ஒரே நாளிலேயே நடிகர் அஜித்திற்கு சுமார் 25,000 ரசிகர் மன்றம் திறக்கப்பட்டதாக சரண் கூறினார் மேலும் இதை அப்பொழுது பார்த்த முன்னணி நடிகர்களே அதிர்ச்சியில் இருந்தனராம்.

Leave a Comment