ரூ.900 கோடி பட்ஜெட்டில் விஜய், ஷாருக்கானை வைத்து உருவாக இருக்கும் திரைப்படம்.! இயக்குனர் இவர்தான்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் மற்றும் பாலிவுட்டில் பிரபல நடிகரான ஷாருக்கான் இவர்கள் இருவரும் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் இந்த திரைப்படத்தை மிகவும் பிரம்மாண்டமான இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.900 கோடியில் உருவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வாரிசு திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்பொழுது வரையிலும் ரூபாய் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவரை அடுத்து ஷாருக்கான் நடிப்பில் பதான் திரைப்படம் வெளியாகி ரூபாய் 700 கோடி வசூல் ஆனதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு இந்த இரண்டு முன்னணி நடிகர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் விஜய் மற்றும் ஷாருக்கான் ஆகிய இருவரையும் இணைத்து ஒரு புதிய திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். அந்த படம் உலக அளவில் மிகப்பெரிய வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு இவர்கள் இணையும் இந்த படத்தினை இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து ரூபாய் 90 கோடி பட்ஜெட்டில் உருவாக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவர்கள் நடிக்கும் அண்டர் வாட்டர் விஞ்ஞான கதை படமாக இருக்கும் எனவும் இந்த படத்தினை பிரம்மாண்டமான  இயக்குனர் சங்கர் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்பொழுது இயக்குனர் சங்கர் இந்தியன் 2 மற்றும் ஆர்சி 15 ஆகிய படங்களை இயக்கி வரும் நிலையில் விஜய் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஷாருக்கான் அதே போல் ஜவான் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இவர்கள் மூவரும் தங்கள் பணி புரிந்து கொண்டிருக்கும் படவேலைகளை முடித்துவிட்டு இவர்கள் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றினை உருவாக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு முதன் முறையாக இரண்டு முன்னணி நடிகர்களில் இணைந்து ஒரு படம் உருவாக இருக்கும் நிலையில் இது உலக அளவில் மிகவும் பிரம்மாண்டமான வெற்றினை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment