பரபரப்பை ஏற்படுத்துவதற்காக மாநாடு திரைப்படத்திலிருந்து புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு.!

சிம்பு நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் ஈஸ்வரன் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக நன்றாக வசூல் செய்து சாதனை படைத்தது.

அதனைத் தொடர்ந்து சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமல்லாமல் பாரதிராஜா,கருணாகரன்,பிரேம்ஜி எஸ்.ஜே சூர்யா போன்ற பல முக்கியமான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து திரைப்படம் எப்பொழுது முடிந்துவிடும் என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள் இந்தத் திரைப்படத்திற்காக யுவன் சங்கர் ராஜா இசையமைத்து சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் படத்திற்கான இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது வருகின்ற மே 12ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பர்ஸ்ட் சிங்கிள் ரசிகர்களுக்கு வெளியிட உள்ளதாக தகவல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதள பக்கங்களில் பட குழுவினர்கள் வெளியிட்டு வருகிறார்கள் அந்த வகையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் மாநாடு திரைப்படத்தின் புதிய புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் இந்த புகைப்படங்களில் சிம்பு கோட் சூட் போட்டுக் கொண்டு ஒரு நடிகையுடன் பேசிக்கொண்டிருக்கிறார்.

மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்தப் புகைப்படங்களை இணையதளத்தில் ஷேர் செய்து வருவது மட்டுமல்லாமல் எப்பொழுது படம் வெளியாகும் என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment