பண மழையில் நனையும் நெஞ்சம் மறப்பதில்லை டீம் .! இதுவரை எவ்வளவு கல்லா கட்டி உள்ளது தெரியுமா.!

கொரோனா தொற்று காரணமாக சமீபகாலமாக சிறப்பான திரைப்படங்கள் ஒன்றும் வெளிவராமல் இருந்து வந்த நிலையில் கடந்த பொங்கலன்று விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வந்து நல்லதொரு வெற்றியை கொடுத்தது அதன் பிறகு எந்த ஒரு படமும் அதற்கு ஏற்ற வகையில் இல்லாமல் இருந்ததால் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமே கிடைத்தது.

இந்த நிலையில் இயக்குனர் செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் பல வருடங்கள் கழித்து தடைகளை மீறி சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது எஸ் ஜே சூர்யாவும் செல்வராகவன்னும் முதல் முறையாக கூட்டணி அமைத்த படம் தற்போது வசூலில் வாரிக் குவிக்கின்றன.

பைனான்ஸ் பிரச்சினை காரணமாக இத்தனை காலங்கள் சிக்கி இருந்தாலும் படம் வெளிவந்து மக்களை குஷிப்படுத்தி உள்ளது. எஸ் ஜே சூர்யாவின் வித்தியாசமான நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

இது ஒரு பேய் படமாக எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இதுவரை சென்னையில் மட்டும் 1.31 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. எந்த ஒரு முன்னணி நடிகரும் படத்தில் நடிக்காவிட்டாலும் வசூலில் அதிக கல்லாகட்டி  உள்ளது என தியேட்டர் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் மட்டும் இந்தத் திரைப்படம் நிச்சயம் 10 அல்லது 15 கோடி வசூல் தகவல் வெளியாகி வருகின்றன.

படத்தை விட நான்கு மடங்கு 4,5 மடங்கு லாபம் இருக்கிறது என தயாரிப்பாளர் சைடில் இருந்து தகவல்களும் கசிகின்றான.

Leave a Comment