கோடியில் ஒருவன் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு.!

தமிழ் திரையுலகில் ஆரம்ப காலகட்டத்தில் இசையமைப்பாளராக நிறைய திரைப்படங்களை இசையமைத்து பின்பு கதாநாயகனாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்கிய நடிகர்தான் விஜய் ஆண்டனி இவர் ஆரம்ப காலகட்டத்தில் இசை அமைப்பாளராக பணியாற்றி பின்பு ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார்.

இவர் நடித்து வந்த திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பு தந்ததால் அந்த வழியிலேயே தற்போது வலம் வருகிறார்.மேலும் இவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன்,திமிரு புடிச்சவன்,சலீம்,அண்ணாதுரைகாலி போன்ற பல்வேறு திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூலித்து சாதனை படைத்தது.

அதுமட்டுமல்லாமல் விஜய் ஆண்டனி தற்பொழுது கோடியில் ஒருவன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தை மெட்ரோ படத்தை இயக்கிய இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கியுள்ளார் மேலும் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்து நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை இன் பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது மேலும் இந்த திரைப்படத்தின் பாடல்கள்,டீஸர்,ட்ரெய்லர் என எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஆனால் விஜய் ஆண்டனி ரசிகர்கள் படம் எப்போது வெளியாகும் என கேட்டு வந்த நிலையில் தற்போது அவர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் படக்குழு கோடியில் ஒருவன் திரைப்படம் வருகின்ற மே 14-ஆம் தேதி வெளியாகும் அறிவித்துள்ளது.இதனையடுத்து இந்த தகவல் விஜய் ஆண்டனி ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment