நடிகர் சரத்குமாருக்கு தொடர்ந்து டார்ச்சல் கொடுத்த படக்குழு.? கோபத்தில் என்ன செய்தார் தெரியுமா..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சரத்குமார் இவர் ஆரம்பத்தில் ஹீரோவாக நாட்டமை, சூரியன், சூர்யவம்சம், நட்புகாக போன்ற பல படங்களில்   நடித்திருந்தாலும் தற்போது சினிமா உலகில் துணை கதாபாத்திரங்கள் மற்றும் ஹீரோவுக்கு தந்தை, சித்தப்பா, வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

கடைசியாக கூட தளபதி விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படத்தில் தளபதிக்கு தந்தையாக நடித்திருந்தார் அதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்திலும் வெற்றி கரமாக நடித்துள்ளார். மேலும் பெயிரிடப்படாத பல்வேறு படங்களில் கமிட் ஆகி இருக்கிறார் சரத்குமார். இதனால் நடிகர் அவரின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணமே இருக்கின்றன.

தற்போது ஒரு படத்திற்கு இரண்டு கோடி முதல் சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ருத்ரன் திரைப்படத்திலும் கமிட்டாகி நடித்து வந்தார் இந்த படத்தில் இரவு 11 மணிக்கு மேல் தன்னால் நடிக்க முடியாது என ஏற்கனவே கூறு இருந்தார்.

ஆனால் ருத்ரன் படத்தின்  ஷூட்டிங் இரவு 11 மணிக்கு மேல் நடைபெற இருந்தது அதனால் கோபம் அடைந்த நடிகர் சரத்குமார் யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து வெளியே சென்று இருக்கிறார் இதனால் கோபமடைந்த நடிகர் ராகவா லாரன்ஸும் படப்பிடிப்பை விட்டு வெளியேறினார் என கூறப்படுகிறது.

இதனால் ருத்ரன் படத்தின் படப்பிடிப்பு இழுத்துக் கொண்டே போகிறது.
ராகவா லாரன்ஸ், சரத்குமார் இரண்டு பேரும் செம்ம கோபத்தில் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறி இருக்கிறார் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Comment