ச்சீ இதெல்லாம் ஒரு படம்..! அலைபாயுதே படத்தை மோசமாக விமர்சித்த ரசிகர்..!

தமிழ் சினிமாவில் தன்னுடைய திரைப்படத்தை தனித்துவமாக காட்டும் ஒரு இயக்குனர் என்றால் அவர் மணிரத்தினம் தான் அந்த வகையில் இவருடைய இயக்கத்தில் மாதவன் மற்றும் ஷாலினி நடிப்பில் கடந்த 2000 ஆண்டு வெளிவந்த அலைபாயுதே என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காதல் கதைகளும் கொண்ட திரைப்படமாக அமைந்ததன் காரணமாக காலத்தையும் தாண்டி இந்த திரைப்படம் பேசப்பட்டது மேலும் இந்த திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்தது மட்டுமில்லாமல் ஒவ்வொரு பாடல்களுமே இந்த திரைப்படத்தில் மாபெரும் ஹிட்டு கொடுத்து விட்டது.

மேலும் இவ்வாறு வெளிவந்த திரைப்படத்தை தொடர்ந்து காதலர்கள் பெரும்பாலும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ளும் அதிகமானது மட்டுமில்லாமல் பல விமர்சனங்கள் இந்த திரைப்படத்தின் மூலம் ஏழுந்ததை பார்த்திருந்தோம். ஏனெனில் அந்த அளவிற்கு காதலர்கள் இடையே இந்த திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது என்று சொல்லலாம்.

இவ்வாறு வெளிவந்த திரைப்படத்தை உதயம் தியேட்டரில் சென்று பார்க்க மாதவன் மற்றும் இயக்குனர் சுரேஷ்  ரசிகர்கள் இடம் விமர்சனத்தையும் கேட்க ஆரம்பித்தார்கள் அப்பொழுது மாதவன் முதல் திரைப்படம் என்ற காரணத்தினால் காரை விட்டு வெளியே வரவில்லையாம் ஆனால்  இயக்குனர் சுரேஷ் அவர்கள்  விமர்சனத்தை பார்ப்பதற்காக அங்கு சென்று இருந்தாராம்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர் ரசிகர்களிடம் படம் எப்படி இருக்கு என்று கேட்ட பொழுது ஒரு நபர் ச்சி என்று சொல்லிவிட்டு போய்விட்டாராம் மேலும் இதை எப்படி மாதவனிடம் கூறுவது என்று தயக்கம் ஏற்படுவதை தொடர்ந்து பின் கார் சென்றவுடன் ரசிகர்கள் என்ன சொன்னார்கள் என்று மாதவன் சுரேஷிடம் கேட்டதை தொடர்ந்து அவர் உண்மையை கூறிவிட்டார் படம் நல்லா இல்லை என்று கூறுகிறார்கள் என்று.

madhavan-097u
madhavan-097u

ஆனால் சுரேஷ் மனது அதை ஒப்புக்கொள்ளவில்லை மீண்டும் திரையரங்கிற்கு ஓடி சென்று மற்ற ரசிகர்களிடம் கேட்க ஆரம்பித்தார் அப்பொழுது காதலர்கள் பல்வேறு தரப்பினர்கள் இருந்தார்கள் அப்பொழுது ஒரு ஜோடி அழுது கொண்டே இருந்தது அவர்களிடம் விமர்சனம் கேட்கும் பொழுது   இது போன்ற படத்தை எடுக்க முடியாது அவ்வளவு உணர்ச்சிகரமாக இருக்கிறது என்று கூறியது மட்டும் இன்றி படத்தை பார்த்து கண்கலங்கி விட்டேன் என்று அவர் கூறியவுடன் மேடி நீ ஜெயிச்சுட்ட என்று மீண்டும் கத்தி கொண்டு மாதவனிடம் தன்னுடைய சந்தோஷத்தை பகிர்ந்தார்.

Leave a Comment