என் ராசாவின் மனசிலே பற்றி கேள்வி கேட்ட ரசிகர்.! ராஜ்கிரன் பற்றி புட்டு புட்டு வைத்த மீனா.!

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த பின்பு பல நடிகர்களுடன் இணைந்து நடித்து மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருபவர் தான் மீனா இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துவிட்டது என்று தான் கூற வேண்டும்.

அந்த வகையில் பார்த்தால் மீனாவின் திரைப்பயணத்தில் மிகவும் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தான் என் ராசாவின் மனசிலே இதில் அவர் நடித்த சோலையம்மா கதாபாத்திரம் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது ஆம் இவர் இந்த திரைப்படத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக விலங்கிவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

மேலும் சமீபத்தில் மீனாவிடம் சோலையம்மா கதாபாத்திரம் உங்களுக்கு எப்படி இருந்தது என கேட்டதற்கு மீனா கொஞ்சம் கூட தாமதம் செய்யாமல் உடனே பதில் அளித்துவிட்டாராம் ஆம்  சோலையம்மா கதாபாத்திரம்  எனக்கு மிகவும் பிடித்ததாகவும் அன்பு,பாசம் வைத்திருக்கும் ஒரு மனைவி கணவனுக்காக என்ன வேணாலும் செய்யலாம் என கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் எனது திரைப்பயணத்தில் எத்தனை திரைப்படங்களில் நடித்தாலும் எனக்கு சோலையம்மா கதாபாத்திரம் தான் மிகவும் பிடித்திருக்கிறது மேலும் அதில் கர்ப்பிணி பெண்ணாக எனக்கு நடிக்க வேண்டும் என்ற தகவலை இயக்குனர் கூறியதும் எனக்கு மிகவும் சிறிய வயதாக இருந்தது அதனால் என்னால் உள்வாங்கி நடிக்கவும் கொஞ்சம் சிரமமாக இருந்தது என கூறியுள்ளார்.

meena2

அதனைத்தொடர்ந்து இதில் ராஜ்கிரன் அவர்களுடன் நடித்து இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்குவது மட்டுமல்லாமல் இயக்குனர் ஆரம்பத்தில் என்னிடம் கதை பாதிதான் சொன்னார் அதில் ராஜ்கிரண் நடிப்பது பற்றி எனக்கு தெரியவில்லை ஆனால் அதற்குப் பின்பு சொன்ன பிறகு எனக்கு ஷாக்காக இருந்தது என கூறியுள்ளாராம்.இதனைத்தொடர்ந்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் மீனாவிற்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என கூறி வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version